News August 7, 2025
செப்.1 முதல் சம்பள உயர்வு: TCS

TCS நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் 80% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் எனவும், ஜூனியர் முதல் நடுத்தர ஊழியர்கள் வரை இதில் பலன் பெறுவர் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, சமீபத்தில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 9, 2025
பீர் அடிச்சா… இதெல்லாம் சாப்பிடாதீங்க!

பீர் அருந்தும் போது கலோரி அதிகமான Non-Veg உணவுகள் சாப்பிடுவது நல்லதல்ல. காரமான உணவுகள் நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லையை ஏற்படுத்தலாம். Bread, Dark chocolate ஆகியவையும் நல்லதல்ல. Beer, Bread இரண்டிலும் ஈஸ்ட் அதிகம். இது செரிமானத்தை பாதிக்கும். அதிகம் உப்பு சேர்த்த உணவுகளில் Sodium அதிகம் உள்ளதால், Dehydration, BP ஏற்படலாம். மொத்தத்தில் உடல்நலத்துக்கு கேடான பீரை தவிர்ப்பது நலம் என்கின்றனர் டாக்டர்கள்.
News August 9, 2025
அதிமுகவுடன் கூட்டணியில்லை.. பிரேமலதா அறிவிப்பு

<<17341369>>பிரேமலதா – அதிமுக Ex அமைச்சர் KC வீரமணி<<>> இடையேயான சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வியை எழுப்பி இருந்தது. இந்நிலையில், அவரது ஹோட்டலில் தங்கி இருந்ததால் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், இதனால் அதிமுகவுடன் கூட்டணி என சொல்ல முடியாது எனவும் பிரேமலதா விளக்கியுள்ளார். 2026 ஜன. 9-ல் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
News August 9, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.