News December 30, 2024

பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!

image

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான அரசு மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில், இப்பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் மாத சம்பளமாக ரூ. 11,970 பெற்று வந்த நிலையில், அது தற்போது ரூ.14,150ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிக ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

காலையில் இத பண்ணுங்க…

image

நல்ல தூக்கம் மட்டுமின்றி, காலையில் செய்யும் ஒரு சில விஷயங்கள், அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்
*வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் கழிவுகள் வெளியேற உதவியாக இருக்கும் *சுறுசுறுப்பாக இருக்க, உடற்பயிற்சி செய்யுங்க *தியானம், மன அமைதிக்கு உதவும் *எந்த காரணத்திற்கும் டிபனை உட்கொள்ளாமல் இருக்க வேண்டாம். சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

News July 11, 2025

பெங்களூருவில் தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ்

image

பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் 7000 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டசத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ₹2.88 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டம் மூலம் தினமும் 5000 நாய்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

₹36,900 சம்பளத்தில் அரசு பள்ளிகளில் 1,996 காலியிடங்கள்

image

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 1,996 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed, B.Sc.Ed படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும் (இதில் தமிழ் கட்டாயம்). ₹36,900- ₹1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

error: Content is protected !!