News April 13, 2025
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு? CM ஆலோசனை

அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படியை உயர்த்த முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கிறது. ஏற்கெனவே அதிமுக கூட்டணியை அறிவித்து, தேர்தல் வேளைகளை தொடங்கிவிட்டது. இதனால், அரசு ஊழியர்களின் வாக்கை கவரும் வகையில், நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் 2% அகவிலைப்படி உயர்வை அறிவிக்க ஸ்டாலின் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 25, 2025
ஆரோக்கியமா இருக்க இந்த ஒரு சூப் குடிங்க போதும்!

குளிர்காலங்களில் சூடாக குடிப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த உணவு சூப். அதிலும் பூசணிக்காய் சூப்பில் வைட்டமின் A, C, நார்ச்சத்து என பல சத்துக்கள் உள்ளதால், பல்வேறு நன்மைகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *செரிமானத்தை மேம்படுத்தும் *இதய ஆரோக்கியத்திற்கு நல்லது *கண் பார்வையை அதிகரிக்கிறது *தோலுக்கு நல்லது *எடையை குறைக்க உதவுகிறது *உடலின் நீர்ச்சத்துக்கு உதவுகிறது.
News November 25, 2025
திமுக ஒரு மதவாத கட்சி: ஜெயபிரகாஷ்

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியை மறைக்கவே, உதயநிதி சமஸ்கிருதத்தை பற்றி பேசுகிறார் என பாஜக மாநில துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தற்போது வகுப்புவாத கட்சியாக மாறிவிட்டது என்று விமர்சித்த அவர், திமுக ஆட்சியில் CM முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் இந்துக்களை மிகவும் மோசமாக தரம்தாழ்த்தி பேசுகின்றனர் என்றும் சாடியுள்ளார்.
News November 25, 2025
தமிழகத்தில் தற்கொலை எண்ணத்தில் 4 ஆயிரம் பேர்

2022 முதல் ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ‘14416’ என்ற ஹெல்ப்லைன் மூலம், நடப்பு ஆண்டில் இதுவரை தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வு காண 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாம். குடும்ப சண்டை, கடன் தொல்லை போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆலோசனை பெற்றுள்ளனராம். எதற்கும் தற்கொலை தீர்வல்ல நண்பர்களே..


