News October 8, 2025
330 மடங்கு அதிகமாக கிரெடிட் ஆன சம்பளம்

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சம்பள நாளில் திடீரென, சம்பளத்தை விட 10 மடங்கு அதிக பணம் கிரெடிட் ஆனால் எப்படி இருக்கும்? சிலியில் ஒருவருக்கு அவருடைய சம்பளத்தை (₹46,100) காட்டிலும் 330 மடங்கு (₹1.5 கோடி) அதிகமாக கிரெடிட் ஆகியுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் ராஜினாமா செய்துள்ளார். நிறுவனம் கூடுதல் பணத்தை திரும்ப கேட்ட போதும், சட்ட போராட்டம் நடத்தி ₹1.5 கோடிக்கும் உரிமையாளராகியுள்ளார்.
Similar News
News October 8, 2025
விஜய்யை கைது செய்வது தேவையற்றது: கே.எஸ்.அழகிரி

கரூர் துயரத்தில் மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்தால் அது மோசமான அரசியல் பின்விளைவை ஏற்படுத்தும் என்றும் கைது நடவடிக்கை தேவையற்றது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், விஜய்யை கைது செய்யும் நிலைக்கு CM ஸ்டாலின் செல்லமாட்டார் என்று கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.
News October 8, 2025
கன்பூசியஸ் பொன்மொழிகள்

▶நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும். ▶உண்மையான அறிவு என்பது நமக்குத் தெரிந்ததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே!. ▶ஏழையின் செல்வம் அவனது திறமைதான். ▶எல்லாமே அழகுதான், ஆனால் எல்லோர் கண்களும் அதைக் காண்பதில்லை. ▶உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.
News October 8, 2025
விவசாயிகளை அலைக்கழிக்கும் திமுக அரசு: EPS

விவசாயிகளிடம் இருந்து உரிய காலத்தில் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு அலைக்கழிப்பதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். இடவசதியும், சாக்குகளும் இல்லாததால் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகவும், இதனால் நெல் மணிகளுடன் விவசாயிகள் பல நாள்களாக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதில் போர்க்கால நடவடிக்கை எடுத்து கொள்முதல் செய்வதுடன், விவசாயிகள் கணக்கில் பணத்தை விரைந்து செலுத்தமாறு வலியுறுத்தியுள்ளார்.