News April 17, 2024
3 மாத நிலுவையுடன் வருகிறது ஊதியம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி கடந்த மாதம் 4% உயர்த்தப்பட்டது. இந்தத் தொகை, சில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாத ஊதியத்துடன் வரவில்லை எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தை ஏப்ரல் மாத சம்பளத்துடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3 மாத நிலுவைத் தொகையுடன் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 11, 2025
நாட்டை உலுக்கிய கார் வெடிப்பு: தலைவர்கள் இரங்கல்

டெல்லியில் ஹூண்டாய் கார் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார். டெல்லி சம்பவம் மனதை உலுக்கியதோடு, மிகுந்த வேதனை அளிப்பதாக ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார். இதேபோல், நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், EPS உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News November 11, 2025
முதுகுவலியை தவிர்க்க… இதை செய்யுங்க!

இன்று முதுகுவலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தசை இறுக்கம், நீண்ட பயணம், கனமான பையை சுமப்பது உள்ளிட்டவை இதற்கு காரணமாகலாம். இதை தவிர்க்க, 30 mins-க்கு ஒருமுறை, உட்கார்ந்த இடத்திலிருந்தே முடிந்தவரை திரும்புதல், நேராக உட்காருதல், அடிக்கடி எழுந்து உட்காருவது, நடைபயிற்சி போன்றவற்றை செய்யலாம். தரையில் பாயில் படுத்து உறங்குவது பெரும்பாலான முதுகுவலிகளை குணப்படுத்திவிடும்.


