News November 15, 2024
சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதனால், பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 5 மணிக்கு சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், நெய்யபிஷேகத்துடன் ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
Similar News
News March 2, 2026
இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுக எங்கே சென்றது?

பாக்., ஆதரவுடன் பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அமைதி காத்ததாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். போலீஸ் பாதுகாப்புடன் கமேனி கொலையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்ட அவர், சாதாரண மக்கள் போராடினாலே கைதுசெய்யப்படும் நிலை உள்ளது என்றார். மேலும், திமுக எப்போதும் அப்பீஸ்மெண்ட் பாலிடிக்ஸ் செய்வதாகவும் சாடியுள்ளார்.
News March 2, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹920 குறைந்தது

ஈரான் – US போரால் தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்று (மார்ச் 2) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹115 குறைந்து ₹15,660-க்கும், 1 சவரன் ₹920 குறைந்து ₹1,25,280-க்கும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 2, 2026
திமுகவின் நிபந்தனையால் அதிருப்தியில் வைகோ?

வரும் தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட வேண்டும், அதுவும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என தீர்க்கமாக இருக்கிறாராம் வைகோ. ஆனால் 6 சீட் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம், தனி சின்னம் என்றால் வெறும் 3 சீட் தான் கொடுக்க முடியும் என திமுக தலைமை நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. எனவே, திமுக இப்படி பிடி கொடுக்காமல் இருப்பதால் வைகோ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


