News April 1, 2025
சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18ம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும். தொடர்ந்து வைகாசி மாத பூஜைக்காக மே 14ம் தேதி திறக்கப்பட்டு, மே 19ம் தேதி நடை அடைக்கப்படும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.
Similar News
News April 2, 2025
வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம்… நீங்க என்ன சொல்றீங்க?

முஸ்லிம்கள் தானமாக கொடுத்த வக்ஃபு சொத்துகளை கண்காணிப்பதே வக்ஃபு வாரியம். இந்த வாரியத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் திருத்தங்கள் வேண்டும் எனக் கூறி, இன்று ‘வக்ஃபு (திருத்தம்) மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால், இம்மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றன. இந்த மசோதா பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 2, 2025
அணி மாறும் ஜெய்ஸ்வால்..!

உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார் ஜெய்ஸ்வால். தனது தனிப்பட்ட விஷயம் காரணமாக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. U-19 வீரராக இருந்த காலத்தில் இருந்து ஜெய்ஸ்வால், மும்பை அணியில் விளையாடி வருகிறார்.
News April 2, 2025
4 நாட்கள் கனமழை எச்சரிக்கை

<<15967569>>இன்று<<>> கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை உள்ளிட்டவை. நாளை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரி. 4ஆம் தேதி: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி. 5ஆம் தேதி: கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல்.