News April 15, 2024

திருஷ்டி தோஷம் போக்கும் சபரிமலை ‘மை’ சாந்து

image

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். அதனை கழிக்கும் ஆற்றல் ஆழித்தீயில் இருந்து எடுக்கப்படும் மை சாந்திற்கு உண்டாம். ஐயப்பன் காயத்ரி மந்திரத்தை சொல்லி நெற்றியில் அந்த மையை இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.

Similar News

News November 19, 2025

பாரதியார் பொன்மொழிகள்

image

*விழும் வேகத்தை விட, எழும் வேகம் அதிகமாக இருந்தால். தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.

News November 19, 2025

இந்தியாவின் பயிற்சியில் புதிய சுழற்பந்து வீச்சாளர்

image

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் கௌசிக்கை வைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கௌசிக் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கையிலும், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கையிலும் போடும் திறமை கொண்டவர்.

News November 19, 2025

பக்தர்களுக்கு மலையேற்றம் உண்டா? எ.வ.வேலு

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலையில் ஏற அனுமதி உண்டா என பக்தர்களுக்கு குழப்பம் உள்ளது. இந்நிலையில், தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவதா இல்லையா என முடிவெடுக்கப்படும் என அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!