News April 15, 2024
திருஷ்டி தோஷம் போக்கும் சபரிமலை ‘மை’ சாந்து

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். அதனை கழிக்கும் ஆற்றல் ஆழித்தீயில் இருந்து எடுக்கப்படும் மை சாந்திற்கு உண்டாம். ஐயப்பன் காயத்ரி மந்திரத்தை சொல்லி நெற்றியில் அந்த மையை இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News November 23, 2025
இந்தியாவுடன் கூட்டமைப்பை உருவாக்கிய ஆஸி, கனடா

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து, தொழில்நுட்பம் மற்றும் புதுமை கூட்டமைப்பை (ACITI) உருவாக்கியுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில், 3 நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்த கூட்டமைப்பு வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதிலும் இணைந்து செயலாற்ற உள்ளனர்
News November 23, 2025
உசைன் போல்ட் பொன்மொழிகள்

*உங்களுக்கென்று ஒரு வரம்பை நீங்களே அமைக்க வேண்டாம். *உங்கள் ஆளுமை வெளிப்படும் போது தான் உங்களை யார் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள் *உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். *மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.
News November 23, 2025
ஸ்மிருதியின் காதல் வைபோகம் PHOTOS

2 நாள்களாக கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் காதல் காட்சிகளே இணையத்தில் வைரலாகியுள்ளது. லவ் ப்ரொபோஸ், நிச்சய அறிவிப்பு, ஹல்தி நிகழ்ச்சி என இருவருக்கும் இடையேயான காதல் பொங்கி வழிய, பதிலுக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இதனிடையே மெஹந்தி நிகழ்ச்சியின் போட்டோஸை சக இந்திய வீராங்கணைகள் பகிர அதுவும் லைக்குகளை குவித்து வருகிறது.


