News April 15, 2024

திருஷ்டி தோஷம் போக்கும் சபரிமலை ‘மை’ சாந்து

image

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். அதனை கழிக்கும் ஆற்றல் ஆழித்தீயில் இருந்து எடுக்கப்படும் மை சாந்திற்கு உண்டாம். ஐயப்பன் காயத்ரி மந்திரத்தை சொல்லி நெற்றியில் அந்த மையை இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.

Similar News

News October 14, 2025

கரூர் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தது SIT

image

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்றியதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) இடைக்கால தடைவிதித்தது. இதனால் SIT குழுவினர் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்கள் உடனடியாக சிபிஐ-யிடம் வழங்கப்படும்.

News October 14, 2025

BREAKING: TET தேர்வு தேதி அறிவிப்பு

image

2026-ல் <<17996230>>3 சிறப்பு TET<<>> தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்தது. இந்நிலையில், உத்தேச தேர்வு தேதியை TRB அறிவித்துள்ளது. ஜனவரி 24 (அ) 25-ம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என்றும், ஜூலை, டிசம்பரில் நடைபெறும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்காக சிறப்பு TET தேர்வு நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 14, 2025

BREAKING: விஜய் புதிய முடிவு.. விரைவில் தேதி அறிவிப்பு

image

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அக்.17-ம் தேதி விஜய் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், N.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பட்டினப்பாக்கம் இல்லத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், விஜய் கரூர் செல்லும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சந்திக்கும் புதிய தேதியை ஓரிரு நாள்களில் N.ஆனந்த் தெரிவிப்பார் என நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!