News October 5, 2025
நடிகர் ஜெயராமன் வீட்டில் சபரிமலை தங்கத்தகடு

சபரிமலை துவார பாலகர் சிலையின் தங்க கவசத்திலிருந்து 4 கிலோ தங்கம் மாயமானதாக எழுந்த குற்றச்சாட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2019-ல் நடிகர் ஜெயராமன் வீட்டில் சபரிமலை தங்கத்தகடு வைத்து பூஜை நடத்தியது தெரிய வந்துள்ளது. கோயிலின் முன்னாள் ஊழியர் உன்னிகிருஷ்ணன் போற்றி, காணிக்கை வசூலுக்காக தங்கத்தகடை பணக்காரர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Similar News
News October 5, 2025
Women’s WC: இன்று இந்தியா – பாக்., மோதல்

2025 மகளிர் உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா, பாக்., அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் முதலில் எதிர்கொண்ட இலங்கை அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டது. அதேநேரம், வங்கதேசம் உடனான போட்டியில் பாக்., 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று இரு முக்கிய அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியா கைகுலுக்கலில் ஈடுபடாது.
News October 5, 2025
விஜய்யின் தவெக உடன் கூட்டணியா? விளக்கம்

நீண்ட காலமாகவே விஜய்யுடன் ராகுல் காந்திக்கு பழக்கம் உள்ளதாக KS அழகிரி கூறியுள்ளார். கரூர் துயர சம்பவத்தையடுத்து, விஜய்யுடன் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக ராகுல் பேசினார். இதனால் தவெகவுடன் காங்., கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அழகிரி, பேசியதற்காக எல்லாம் கூட்டணி அமைக்கும் என கூற முடியாது என்றார். திமுகவுடனான கூட்டணி உடையாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
ஆயுள் வளர்க்கும் ஆழ்ந்த சுவாசம்!

உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் செயல்முறைகளில் ஒன்று ஆழ்ந்த மூச்சுவிடுதல். ஆழ்ந்த மூச்சுவிடும் போது ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது, படபடப்பு குறைகிறது. மேலும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் குறைவதுடன், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கிறது. அதே போல, இது நுரையீரலுக்கு பயிற்சியாக அமைவதுடன், உடல், மன ஆற்றல்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது. SHARE.