News March 1, 2025

SAவுக்கு 180 ரன்கள் இலக்கு

image

CT தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. கராச்சி மைதானத்தில் டாஸ் வென்ற ENG முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் SA வீரர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ENG அணியினர் 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். அதிகபட்சமாக ரூட் 37, ஆர்ச்சர் 25 ரன்கள் எடுத்தனர். SA தரப்பில் ஜான்சென், மல்டர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Similar News

News March 1, 2025

பிரபல நடிகை சுசந்தா காலமானார்

image

இலங்கையை சேர்ந்த பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி (61) காலமானார். நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில், அவர் இன்று காலமானார். சிங்கள திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை சுசந்தா, திரைப்படம், நாடகம் என இரண்டு தளங்களிலும் சிறந்த நடிகையாக திகழ்ந்தவர். இவரது மகள் திசுரி யுவனிகாவும் திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு கலைஞர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 1, 2025

பெண்கள் சொல்வது எல்லாமே ‘வேதம்’ அல்ல: ஐகோர்ட் அதிரடி

image

தன்னை அலுவலக மேலதிகாரி (ஆண்) பாலியல் கொடுமை செய்ததாக, பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் அதிகாரிக்கு ஜாமின் வழங்கிய கேரள ஐகோர்ட், புகார் கொடுப்பவர் பெண் என்பதாலேயே, அவர் சொல்வது எல்லாம் வேதம் என எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும், இருதரப்பு வாதத்தையும் போலீஸ் முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி பிவி குனிகிருஷ்ணன் அறிவுறுத்தினார். நீதிபதியின் கருத்து பற்றி உங்க கருத்து என்ன?

News March 1, 2025

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி எண்

image

மார்ச் 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்களது புகார்கள், ஐயங்களை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். 7518 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

error: Content is protected !!