News April 10, 2025
எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது

பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு 2025-ம் ஆண்டுக்கான ‘பாரதிய பாஷா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய துறையில் முக்கிய பங்கு ஆற்றியோருக்கு ஆண்டுதோறும் கொல்கத்தாவை சேர்ந்த ‘பாரதிய பாஷா’ பரிஷத் அமைப்பு விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில், எஸ். ராமகிருஷ்ணனுக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.1 லட்சம் காசோலையுடன் பரிசுக் கேடயமும் அளிக்கப்பட இருக்கிறது.
Similar News
News April 18, 2025
காலமுறை ஊதியம் வழங்குக: ஓபிஎஸ் வலியுறுத்தல்

வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குமாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பெருமழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது இரவு, பகல் பாராமல் உழைக்கும் கிராம உதவியாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, பணியின்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News April 18, 2025
நடுவானில் விமானத்தில் நடந்த சம்பவம்

மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் இருந்து சிறிய ரக விமானத்தை கத்திமுனையில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோரோஷல் நகரில் இருந்து சுற்றுலா தலமான பெட்ரோவுக்கு 14 பயணிகள், 2 விமானிகளுடன் அந்த விமானம் புறப்பட்டது. நடுவானில் கத்திமுனையில் ஒருவர் விமானத்தை கடத்த முயன்றபோது, பயணி ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்டவர் அமெரிக்கர் என தெரியவந்தது.
News April 18, 2025
தங்கம் கையிருப்பு: 2-வது இடத்தில் இந்தியா!

தங்கத்தின் விலை ஆண்டு இறுதிக்குள் சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டி விடும் அளவுக்கு தினசரி உயர்ந்து வருகிறது. இதனால் சாமான்ய மக்களுக்கு இந்த மஞ்சள் உலோகம் எட்டாக் கனியாகி வருகிறது. எனினும், தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் ஆசிய நாடுகளில் இந்தியா 2-வது இடத்தை பிடித்திருக்கிறது. மொத்தமாக இந்தியாவிடம் 854 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கிறது. 2,263 மெட்ரிக் டன்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.