News September 3, 2025
பாக்.,-ஐ பந்தாடிய S-400.. இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்

வான் பாதுகாப்பு அமைப்பான S-400-ஐ அடுத்த 2 ஆண்டுகளில் ரஷ்யா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ல் 5 S-400 அமைப்புகளை ₹39,000 கோடி மதிப்பில் வாங்க இந்தியா ரஷ்யாவிடம் ஒப்பந்தம் செய்தது. அதில் மூன்றை ஏற்கனவே ரஷ்யா வழங்கிய நிலையில், 2026, 2027-ல் மீதமுள்ள இரண்டையும் வழங்க உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் ஏவுகணைகளை S-400 இடைமறித்து தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 5, 2025
நடிப்பிற்கு Bye-Bye சொல்லும் நடிகை?

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், ரஜித் இப்ரான் எனும் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இன்னும் இரு மாதங்களில் துபாயில் நடைபெறவிருக்கும் அத்திருமணத்திற்கு திரையுலகினர் யாரையும் அழைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என கூறப்படுகிறது. அத்துடன் இனி படங்களில் நடிப்பதற்கும் End Card போட முடிவெடுத்திருக்கிறார் என தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News September 5, 2025
NIA வசம் செல்லுமா தர்மஸ்தலா வழக்கு?

தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக எழுந்த புகார் நாட்டையே பதற வைத்தது. இந்த வழக்கை NIA விசாரிக்க வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த ‘சனாதன சாந்த் நியோகா’ என்ற அமைப்பு அமித்ஷாவிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளது. வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கும் எனவும் அவர்களிடம் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
News September 5, 2025
வாழ்க்கையை ஒளிர்விக்கும் விளக்குகள் – நம் ஆசிரியர்கள்!

ஆசிரியர்கள் நம் வாழ்வில் ஒளியை நிரப்பும் விளக்குகள். அவர்கள் நமக்கு அறிவையும், நல்ல பழக்கங்களையும் கற்றுத்தருகிறார்கள். தவறு செய்தால் திருத்தி, வெற்றிக்கு வழிகாட்டி, இரண்டாம் பெற்றோர் போல அன்பும் அக்கறையும் காட்டுகிறார்கள். இன்று ஆசிரியர் தினத்தில், அவர்களின் உழைப்புக்கும் தியாகத்துக்கும் மனமார்ந்த நன்றியும் மரியாதையும் செலுத்துவோம். உங்களின் வாழ்வை செதுக்கிய சிறந்த ஆசிரியர் யார்? SHARE IT.