News May 8, 2025

பாக்., ஏவுகணைகளை தவிடு பொடியாக்கிய S-400

image

பாகிஸ்தான் ஏவிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை நமது ராணுவம் இடைமறித்து அழித்துவிட்டது. இதில் முக்கிய பங்கு வகித்தது ரஷ்ய தயாரிப்பான S-400 Air Defence system தான். உலகின் சக்திவாய்ந்த வான்பாதுகாப்பு அமைப்பான இது, 400 கிமீ தொலைவுவரை எதிரி விமானங்கள், ஏவுகணைகளை வருவதை கண்டறிவதுடன், 600 கிமீ வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனுள்ளது. எல்லை மாநிலங்களில் நான்கு S-400 அமைப்புகளை ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது.

Similar News

News November 28, 2025

ரெட் அலர்ட்: 14 மாவட்டங்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

image

டிட்வா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, <<18379714>>ரெட் அலர்ட்<<>>, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 14 மாவட்ட கலெக்டர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய அவர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்

News November 28, 2025

வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடக்கம்

image

இரட்டை வரி விதிப்பு விவகாரம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பஸ் உரிமையாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையில், பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு இன்று மாலையில் இருந்து பஸ் சேவை இயக்கப்படும் என ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

தவெக எலி, அதிமுக புலி: ஜெயக்குமார் பாய்ச்சல்

image

செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பதை ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாகவே இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதாவது, தவெகவை எலி என்றும், அதிமுகவை புலி எனவும் மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், செங்கோட்டையன் அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்தவர் என்றும், அவர் எங்கிருந்தாலும் வாழ்க எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

error: Content is protected !!