News December 28, 2024

ஒரே நாளில் 450 பேரை கொன்று குவித்த ரஷ்யா

image

ரஷ்யா ராணுவம் நேற்று ஒரே நாளில் 450 உக்ரைன் வீரர்களை கொன்றதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் படைகள் நடத்திய 12 தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாகவும், உக்ரைனுக்குச் சொந்தமான 2 பீரங்கிகள், 3 தரைப்படை தாக்குதல் வாகனங்களை அழித்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Similar News

News April 3, 2026

காங்., 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

image

நாங்குநேரி – ரூபி மனோகரன், குளச்சல்- தாரகை கத்பர்ட், விளவங்கோடு – டி.டி.பிரவீன், ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன், உதகை – ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் – சூரியபிரகாஷ், சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு, மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது, அறந்தாங்கி – ராமச்சந்திரன், காரைக்குடி – மாங்குடி, சங்கரன்கோவில் – சங்கை கணேசன், அம்பாசமுத்திரம் – வி.பி.துரை ஆகியோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்.7 முதல் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.6 (திங்கள்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகள் இயங்காது என கல்வித் துறை தெரிவித்துள்ளது. SHARE IT

News April 3, 2026

ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் ECI: வீரபாண்டியன்

image

மத்திய அரசின் தலையீட்டால் தமிழ்நாடு டிஜிபி மாற்றப்பட்டுள்ளதாக CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக ECI செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என அவர் சாடியுள்ளார். இத்தகைய பாரபட்சமான போக்கை கைவிட்டுவிட்டு, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதை ECI தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!