News May 24, 2024
ஐபிஎல் போட்டிகளில் ரன் குவிப்பை தடுக்க முடியாது

ஐ.பி.எல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதிமுறை இல்லாவிட்டாலும் அதிக ரன் குவிப்பதைத் தடுக்க முடியாது என அஷ்வின் தெரிவித்துள்ளார். ஆடுகளங்கள் தரமாக அமைக்கப்படுவதால் மட்டுமே பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிக்கவில்லை என்று கூறிய அவர், பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டி சூழ்நிலை வரலாம் என்றும் அவர் கூறினார்.
Similar News
News March 16, 2026
சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் KN நேரு

மீண்டும் திமுக ஆட்சி அமைய அதிகாரிகள் துணை நிற்க வேண்டும் என KN நேரு பேசியது சர்ச்சையாகியுள்ளது. முசிறியில் பேசிய அவர், பணி நிமித்தமாக சில நேரங்களில் அரசு அதிகாரிகளிடம் கடுமையாக பேசியிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். இதனிடையே, அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திமுக முயல்வதாகவும், அதனை ECI கண்காணிக்க வேண்டும் எனவும் அதிமுக, பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
News March 16, 2026
சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் KN நேரு

மீண்டும் திமுக ஆட்சி அமைய அதிகாரிகள் துணை நிற்க வேண்டும் என KN நேரு பேசியது சர்ச்சையாகியுள்ளது. முசிறியில் பேசிய அவர், பணி நிமித்தமாக சில நேரங்களில் அரசு அதிகாரிகளிடம் கடுமையாக பேசியிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். இதனிடையே, அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திமுக முயல்வதாகவும், அதனை ECI கண்காணிக்க வேண்டும் எனவும் அதிமுக, பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
News March 16, 2026
தவெக சின்னத்தில் குழப்பம்… அருண்ராஜ்

வயதான பெரியோர்களுக்கு தவெகவின் சின்னத்தில் குழப்பம் உள்ளதாக அருண்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தவெகவின் கொடியில் யானை இருப்பதால், சின்னம் யானையா? விசிலா என்பதில் வயதான பெரியோர்கள் பலரும் குழப்பத்தில் இருப்பதால் நிர்வாகிகள் அதனை போக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களை போல விசிலை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தவெகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


