News March 24, 2025

மகிழ்ச்சியான மனநிலைக்கு தினமும் 10 நிமிடம் ஓடுங்கள்

image

தினமும் 10 நிமிடம் ஓடுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். ஓடுவதால் பெருமூளை தமனியில் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து, மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது, மூலையில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. மேலும் மூளையின் முன்புரணியை தூண்டுவதன் மூலமாக, மூளை சிறப்பாக செயல்பட்டு மகிழ்ச்சி ஏற்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News March 25, 2025

தொடர் விடுமுறை: குவிந்த கூடுதல் பஸ்கள்!

image

ரம்ஜான் பண்டிகை வரும் 31ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ளனர். இவர்களின் வசதிக்காக, கிளாம்பாக்கத்தில் இருந்து 990 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

News March 25, 2025

உங்களுக்கும் இதே மாதிரி ஃபீல் ஆகுதா?

image

சோர்வு, தலைச்சுற்றல், கை, கால்கள் நடுக்கம், இருமல், சளி போன்றவற்றால் பலரும் கடந்த ஒரு வாரமாக அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், பருவகாலம் மாற்றம் மற்றும் சூரிய வெப்ப தாக்கம் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக் கொள்ளவும், மிகவும் முடியவில்லை என்றால் டாக்டரை அணுகவும் அறிவுறுத்துகின்றனர். உங்களுக்கும் இதே ஃபீலிங் இருக்கா?

News March 25, 2025

இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு இங்கி. தடை

image

2009ல் LTTEக்கு எதிரான போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உட்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதிகள் ஷவேந்திர சில்வா, கரண்ணகோடா, ஜகத் ஜெயசூர்யா, LTTEயில் இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு துணை அமைச்சரான விநாயகமூர்த்தி ஆகியோர் அந்நாட்டிற்கு வர தடை மற்றும் அவர்களது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!