News August 18, 2024
மாதம் ₹1000 பெற சிறப்பு முகாம் என்பது வதந்தி

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 குறித்த வதந்தியை, மக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் நடப்பதாக சோஷியல் மீடியாவில் வெளியான செய்தியை நம்பி, பெண்கள் பலர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர். இதுகுறித்து பேசிய அவர், வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புவதால், அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News December 18, 2025
ராணிப்பேட்டை: வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

ராணிப்பேட்டை மக்களே.., வங்கியில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18- 32 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 18, 2025
அஸ்வின் Vs CSK ரசிகர்கள்.. வெடித்தது மோதல்

SM-ல் கடந்த சில நாள்களாக அஸ்வினுக்கும், CSK ரசிகர்களுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. ஏலத்தில் யாரையெல்லாம் CSK வாங்கும் என்ற தகவலை கசியவிட்டு, வேண்டுமென்றே விலையை ஏற்றிவிட்டதாக ரசிகர்கள் சாடினர். தற்போது யூடியூப்பிலும், CSK-வின் வீரர்கள் தேர்வை அஷ்வின் மறைமுகமாக விமர்சித்தார். CSK மீது எதற்காக வன்மம் பரப்புகிறீர்கள் என்ற கேள்விக்கும், அஸ்வின் Haha Smiley பதிவிட்டதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
News December 18, 2025
தவறாக பயன்படுத்தப்படும் AI.. என்னதான் தீர்வு?

AI டெக்னாலஜியை பயன்படுத்தி, தொடர்ந்து சோஷியல் மீடியாவில் நடிகைகள் குறித்து மிகவும் மோசமான வகையில் போட்டோக்கள் பகிரப்படுகின்றன. நடிகைகள் ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, நிவேதா தாமஸ் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். டெக்னாலஜியின் வளர்ச்சியால், இப்படியான பதிவுகள் வருங்காலத்தில் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் சூழலில், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?


