News May 19, 2024

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய மோடி திட்டம்

image

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருப்புக்கே மிகப்பெரிய ஆபத்தாக மாறும் என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். மும்பையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “சிவசேனாவை எப்படி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய முயன்றார்களோ, அதேபோன்ற ஆட்டத்தை எதிர்காலத்தில் மோடி ஆர்.எஸ்.எஸ். உடன் விளையாடுவார். சர்தார் வல்லபாய் படேல் போல அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வார்” என்றார்.

Similar News

News March 5, 2026

ஈரானுக்கு சீனா உதவியதா?

image

சீனா ஈரானுக்கு ரகசியமாக ட்ரோன்கள், ஏவுகணைகள், பிற மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பத்தை வழங்கி உதவி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் ஆதரவு இல்லாமல் ஈரான் இவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும், ஈரான் அதன் எதிரிகள் மீது நடத்தி வரும் துல்லியமான தாக்குதல்களை மேற்கோள் காட்டி பின்னணியில் சீனா இருப்பதாக பலரும் விவாதித்து வருகின்றனர்.

News March 4, 2026

சரியான நேரத்தில் சரியான முடிவு.. செல்வபெருந்தகை

image

<<19298958>>தொகுதி பங்கீடு ஒப்பந்தம்<<>> கையெழுத்தானது திமுக – காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்துள்ளது. ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வபெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் திமுகவுடன் இணைந்து சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்த முடிவால் தாங்கள் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதாக கூறினார். மேலும், யார் ராஜ்யசபா MP என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்.

News March 4, 2026

புதுச்சேரியிலும் மகளிர் உரிமைத் தொகை ₹5,000

image

தமிழகத்தை தொடர்ந்து மகளிர் உதவி தொகையை முன்கூட்டியே வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு என மகளிர் உரிமைத் தொகையாக மொத்தம் ₹5,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அதை பின்பற்றி, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மகளிர் நிதி உதவி தொகையான ₹5,000-ஐ முன்கூட்டியே வரவு வைக்க உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!