News October 2, 2025
RSS நிறுவனர் சிறை சென்றார்: மோடி

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது இந்துத்துவா அமைப்புகள் ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைத்ததாக காங்., குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இதுகுறித்து RSS நூற்றாண்டு விழாவில் பேசிய PM மோடி, RSS நிறுவனரான ஹெட்கேவார் உள்பட பலர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் RSS தொடங்கப்பட்டதிலிருந்தே நாட்டை கட்டியெழுப்ப பாடுபட்டது என்றும் மோடி கூறினார்.
Similar News
News October 2, 2025
பிரபல கன்னட நடிகை காலமானார்

பிரபல கன்னட நடிகை கமலாஸ்ரீ (70) உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, இறுதி நாள்களில் வறுமையால் வாடிய அவருக்கு கணவர் மற்றும் பிள்ளைகள் எந்தவிதமான உதவியும் செய்யாமல் இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை. தனிமையிலும், வறுமையிலும் தவித்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News October 2, 2025
இப்பதான் டவுட் அதிகமாகுது: அண்ணாமலை

கரூர் உயிரிழப்புகள் பற்றி செந்தில் பாலாஜி பிரஸ்மீட் கொடுத்தது மேலும் சந்தேகத்தை அதிகரிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் செந்தில் பாலாஜி கருத்து திணிப்பு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
News October 2, 2025
புதிய தமிழக DGP இறுதி பட்டியலில் 3 பேர்

புதிய தமிழக DGP-ஐ தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம், கடந்த செப்.26-ல் டெல்லியில் நடைபெற்றது. இதில் 8 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இந்நிலையில், பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சந்தீப் ராய் ரத்தோர், சீமா அகர்வால், ராஜீவ் குமார் ஆகிய 3 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளனர். எனவே, விரைவில் இவர்களில் ஒருவர் புதிய DGP ஆக நியமிக்கப்படுவார். தற்போது, வெங்கட்ராமன் கூடுதல் பொறுப்புடன் DGP ஆக உள்ளார்.