News March 13, 2025
பட்ஜெட்டில் ₹-க்கு பதில் ‘ரூ’

2025-26 பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்கான இலச்சினையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய ரூபாய் குறியீட்டிற்கு (₹), பதிலாக ரூ இலச்சினை பயன்படுத்தியுள்ளார். கடந்த பட்ஜெட்டில் ₹ பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மொழி சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், ₹ என்ற குறியீட்டை தவிர்த்து, தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப் படுத்தி உள்ளார்.
Similar News
News March 14, 2025
இது ஏஐ கலாட்டா…. உலகத் தலைவர்களின் ஹோலி…!

ஒவ்வொரு துறையிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. நாம் கற்பனை செய்து பார்ப்பதை கண்முன் கொண்டுவருவது மட்டுமின்றி, கற்பனை கூட செய்ய முடியாத விஷயங்களையும் ஏஐ சாத்தியப்படுத்துகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுவரும் நிலையில், உலகத் தலைவர்கள் ஹோலி கொண்டாடி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கும் உயிர் கொடுத்திருக்கிறது ஏஐ.
News March 14, 2025
நடிகையின் ஜாமின் மனு தள்ளுபடி

துபாயில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஜாமின்கோரி, பொருளாதார குற்றங்களுக்கான கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை இன்று பரிசீலித்த கோர்ட், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தருண் கொண்டுருவின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
News March 14, 2025
மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் அறிவிப்பு

தமிழக பட்ஜெட்டில் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பங்களிப்பான ரூ.1,500 மற்றும் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பான ரூ.6,500 என மொத்தம் ரூ.8,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக மீட்கப்படாத விசைப் படகுகளுக்கான நிவாரணம் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.