News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News December 14, 2025

பிரபல நடிகை மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

<<18559412>>நடிகை ராஜேஸ்வரியின் மரணம்<<>> குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அவரது தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கணவன் சதீஷ் கொடுமைப்படுத்தியதால் ராஜேஸ்வரி சோக முடிவை எடுத்தாரா (அ) வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. டிச.16-ல் ராஜேஸ்வரி மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 14, 2025

ஜூஸ், பிஸ்கட், தண்ணீர், நொறுக்குத் தீனிகள் ரெடி!

image

தி.மலையில் மாலை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மண்டல மாநாட்டில் 1.30 லட்சம் பேருக்கு பிஸ்கட், ஜூஸ், கடலை பர்பி, மிக்சர் உள்ளிட்ட 9 பொருள்கள் அடங்கிய சிற்றுண்டி பை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக வடக்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்றைய மாநாட்டில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலிருந்து 91 தொகுதிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

News December 14, 2025

BREAKING: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அறிவிப்பு

image

நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயம் e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில், ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும், அரசு திட்ட சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. MERA KYC, FACE RD ஆகிய ஆப்கள் மூலம் செல்போனிலேயே ரேஷன் கார்டு e-KYC-ஐ அப்டேட் செய்யலாம். இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனே முந்துங்கள்!

error: Content is protected !!