News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News February 26, 2026

7-ல் 1 இந்தியர் 45 வயதுக்கு உட்பட்டவராம்!

image

சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சியில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 7-ல் ஒரு நபர் 45 வயதுக்குட்பட்டவராக இருப்பது தெரியவந்தது. இது இந்திய இளைஞர்களின் National Stroke Registry-ன்படி உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகையிலை பயன்பாடு உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. பக்கவாதம் ஒரு மருத்துவ அவசரநிலை. ஆனால், 40% பேர் 24 மணி நேரத்திற்கு பின் ஹாஸ்பிடலுக்கு செல்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.

News February 26, 2026

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

*வெற்றியோ தோல்வியோ எதுவரினும் நமது கடமையை செய்வோம். *ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம். *ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத்தான் முன்னேற்றமோ வீழச்சியோ ஏற்படுகிறது. *மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால்தான் நல்ல பெயர் கிடைக்குமானால் அது ஒருபோதும் தேவையில்லை. *அறிவை தேடி ஓடுங்கள்; நாளைய வரலாறு உங்களைத் தேடி ஓடி வரும்.

News February 26, 2026

டிரம்பின் புதிய வரிகள்..

image

டிரம்பின் அதிக வரிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பிறகு, அவர் மற்றொரு புதிய திட்டத்தைத் தயாரித்து வருகிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 15% வரிகள் அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும், அவை சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் சில நாடுகளுக்கு அதிக வரி விதிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!