News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News January 27, 2026
விஜய் அரசியலுக்கு புதுசு… திருந்திடுவார்: குஷ்பு

அதிமுக பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாக விஜய் வைத்த விமர்சனத்துக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். தம்பி அரசியலுக்கு புதுசு எனவும், காலம் காலமாக இருக்கும் கட்சியான அதிமுக யாருடனும் சரணடைய வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எல்லோரும் விசில் அடிக்கும் போது வீராப்பில் வார்த்தைகள் வந்துவிடும். தம்பி திருந்திடுவார். தவெகவின் வாக்கு சர்வேயை வைத்து ஒன்றும் செய்யமுடியாது எனவும் விமர்சித்துள்ளார்.
News January 27, 2026
பெண் வடிவத்தில் அனுமன் இருக்கும் கோயில்?

சத்தீஸ்கரின் ரத்தன்பூர் மாவட்டத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது ரத்தன்பூர் மன்னர் பிருத்வி தேவ்ஜுவால் கட்டப்பட்டது. மன்னரின் கனவில் தோன்றிய அனுமன், அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் இருக்கும் சிலையை எடுத்து வந்து கோயிலை கட்டி பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினாராம். அங்கு பெண் வடிவிலான சிலை கிடைத்த போதிலும், மன்னர் கோயிலை கட்டியுள்ளார். அப்படித்தான் ‘மாதா அனுமன்’ தோன்றியதாகக் கூறப்படுகிறது.
News January 27, 2026
FLASH: இன்று விடுமுறை!

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என வங்கி ஊழியர்கள் சங்கம்(AIBEA) தெரிவித்துள்ளது. போராட்டத்தின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் AIBEA வேண்டுகோள் விடுத்துள்ளது. LIC-ல் 100% அந்நிய முதலீடு, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.


