News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 8, 2026
BREAKING: விஜய் பரப்புரைக்கு அனுமதி

இந்த ஆண்டில் முதல் நிகழ்வாக, சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக மக்கள் சந்திப்பை நடத்த விஜய்க்கு அனுமதி கிடைத்துள்ளது. பிப்.13, மதியம் 12 – 3 மணிக்குள் கூட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5,000 பேர் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், அது ஏற்கப்பட்டுள்ளது. டிராபிக் ஜாம் இல்லாமல் நடத்த வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
News February 8, 2026
காங்கிரஸுக்கு செக் வைக்கும் திமுக ரிப்போர்ட்

காங்., 41 சீட்களை கேட்பதாக தகவல் வெளியான நிலையில், 1 MP-க்கு 3 MLA சீட்கள் வீதம் 27 சீட்கள் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாம். இந்த எண்ணிக்கையை தாண்டி பேச்சுவார்த்தை சென்றால், தனது சர்வே ரிப்போர்ட்டை காண்பிக்கவும் திமுக தயாராகவுள்ளதாம். அந்த ரிப்போர்ட்டில் 12 காங்., MLA-க்களின் செயல்பாடு சரியாக இல்லை என்றும், அவர்கள் மீண்டும் களமிறங்கினால் NDA கூட்டணியே வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
News February 8, 2026
இனி சேப்பாக்கத்தில் விசில் போட முடியாது

NZ, AGF இடையேயான உலகக் கோப்பை போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. விசிலுக்கான தடை குறித்து ICC, BCCI தரப்பில் எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


