News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News January 25, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வந்தாச்சு HAPPY NEWS

image

நெருக்கடியிலிருந்து ஜன நாயகன் மீண்டு விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தற்போது சென்சார் வழக்கிலும் சாதகமான தீர்ப்பு வர அதிகளவில் வாய்ப்புள்ளதாக சட்ட ஆலோசகர்கள் விஜய்யிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர் உற்சாகமடைந்துள்ளதாகவும், தீர்ப்பு வெளியான அன்று மாலையில் ஜன நாயகன் ரிலீஸ் தேதியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News January 25, 2026

புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

குடியரசு தினத்தையொட்டி தற்போது பள்ளி மாணவர்கள் தொடர் விடுமுறையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய தாலுகாவை சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஜன.28-ல் 3 தாலுகாவிலும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய, பிப்.7-ம் தேதி பணிநாள் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News January 25, 2026

ஹிந்தியை திணிக்க ஒரு கும்பல் துடிக்கிறது: CM ஸ்டாலின்

image

காஞ்சிபுரத்தில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, எப்படியாவது ஹிந்தியை நம் மேல் திணிக்க வேண்டும் என ஒரு கும்பல் துடிப்பதாக மத்திய அரசை சாடியுள்ளார். நேரடியாக ஹிந்தியை திணிக்க முடியாமல் மும்மொழிக் கொள்கை மூலம் திணிக்க முயல்வதாகவும், தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பை தடுப்பதினால் ₹3,458 கோடி நிதியை தராமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!