News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News February 1, 2026

தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி கிடைக்குமா? CM ஸ்டாலின்

image

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு கேள்விகளை CM ஸ்டாலின் எழுப்பியுள்ளார். மாணவர்களின் படிப்புக்கான ₹3,548 கோடி கல்வி நிதி, கோவை, மதுரை மெட்ரோ ரயில், மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு உள்ளிட்டவை இடம் பெறுமா? என கேட்டுள்ளார். தேர்தலை வருவதால் TN-க்கான அறிவிப்புகளைத் பட்ஜெட்டில் தவறாமல் இடம்பெறும் என எதிர்பார்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News February 1, 2026

நிர்மலா சீதாராமனின் புடவை சொல்லும் செய்தி!

image

ஒவ்வொரு முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ஒவ்வொரு மாநிலத்தை பிரதிபலிக்கும் வகையில் FM நிர்மலா சீதாராமன் புடவை அணிவார். அந்த வகையில் இந்த முறை தமிழகத்தை பிரதிபலிக்கும் விதமாக அவர், காஞ்சிபுரம் பட்டுப்புடவையை உடுத்தியுள்ளார். ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையில், வெளிர் தங்க- பழுப்பு நிறத்தில் சிறு கட்டங்கள் உள்ளன. மேலும், காபி பிரவுன் பார்டரும் புடவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 1, 2026

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இவ்வளவா? வெளியான தகவல்

image

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ₹54 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதி நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 7.9 சதவீதம் அதிகம் என்று அவர்கள் கூறுகிறார்கள். 2025-26-ல், ₹50.65 லட்சம் கோடி பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது. அத்துடன், இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 6.5% ஆக இருந்தது.

error: Content is protected !!