News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News February 9, 2026

ஏப்., 2-வது வாரத்தில் தமிழக தேர்தல்.. வெளியானது UPDATE

image

TN-ல் ஏப்ரல் 2-ம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் வந்த அவர், பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தலுக்கு இன்னும் 65 நாள்களே இருப்பதால் அனைவரும் தீவிர களப்பணியாற்ற வேண்டும் எனவும், பாஜக மூத்த தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News February 9, 2026

முடியவே முடியாது.. PAK-க்கு ஷாக் கொடுத்த BCCI!

image

T20 WC-ல் இந்தியாவுடன் விளையாட ICC-க்கு பாகிஸ்தான் வைத்த கண்டிஷன்களை BCCI நிராகரித்துள்ளது. இருதரப்பு போட்டி வேண்டும், பாகிஸ்தானில் WC & ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட வேண்டும், போட்டிகளின் போது வீரர்கள் கைகுலுக்க வேண்டும் என்ற எந்த கண்டிஷனையும் ஏற்க முடியாது என BCCI கூறிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி வரும் 15-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

News February 9, 2026

₹1,000 கட்டணத்தை ரத்து செய்ய அரசு திட்டம்!

image

தமிழகத்தில் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. எனினும் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ₹1000 சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை பத்திரப்பதிவை TN முழுவதும் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டு வரும் நிலையில், ₹1000 சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!