News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News January 29, 2026
USA – க்கு படையெடுக்கும் இந்திய நிறுவனங்கள்

இந்தியாவிலிருந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் அமெரிக்காவுக்கு படையெடுத்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வாடிக்கையாளர்கள், விரைவான முதலீடு கிடைக்க வாய்ப்பு, ஏஐ-க்கு உகந்த சூழல் ஆகியவை இந்நிறுவனங்கள் US பக்கம் செல்ல வழிவகுத்துள்ளன. இந்நிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரையறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
News January 29, 2026
திமுகவுக்கு இதுதான் வில்லன்: கடம்பூர் ராஜூ

2021 தேர்தல் வாக்குறுதியில் 15% கூட நிறைவேற்றாததால் இம்முறை அவர்களின் தேர்தல் அறிக்கை அவர்களுக்கே வில்லனாக மாறும் என கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதால் திமுகவுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்ற அவர், திமுகதான் ஓடாத இன்ஜின், அது இனியும் ஓடாது என்றார். மேலும், அதிமுக கூட்டணி நிச்சயமாக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 29, 2026
விரைவில் தமிழக தேர்தல் தேதி.. ECI ஆலோசனை

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கு ECI அழைப்பு விடுத்துள்ளது.


