News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 27, 2026
முதல்முறையாக பேரவையில் நுழையுமா நாதக?

2024 லோக்சபா தேர்தலில் 8.2% வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாதக மாறியுள்ளது. அதேநேரம், இதுவரை 2 பேரவைத் தேர்தல்களில் களம் கண்டும் சீமான் உள்பட ஒரு உறுப்பினர்கூட சட்டப்பேரவைக்குள் நுழையவில்லை. இந்நிலையில், இம்முறை காரைக்குடியில் நிச்சயமாக வெற்றிபெறும் முனைப்பில் சீமான் செயல்படுகிறாராம். அதேபோல், வாக்கு வங்கியை மேலும் உயர்த்தும் வியூகங்களையும் அவர் வகுக்குகிறாராம்.
News February 27, 2026
மலேசிய முருகனை மிஞ்சிய உயரமான கடவுள் சிலைகள்!

உயரமான கடவுள் சிலை என்றாலே பலருக்கும் மலேசிய முருகன்தான் நினைவுக்கு வருவார். ஆனால், அவரைவிட உயரமான கடவுள் சிலைகள் இங்கு உள்ளன. அப்படி உலகின் டாப் 9 உயரமான கடவுள் சிலைகளின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். யார் யார் இருக்காங்க என பார்க்க, மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்யவும். இந்த போட்டோவை, நீங்க மட்டுமே ரசிக்காம நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. நீங்க இதில் எந்த கோயிலுக்கு போயிருக்கீங்க?
News February 27, 2026
அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வூதியம் ₹3,000 ஆக உயர்வு

அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் & தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு ஓய்வூதியத்தை ₹2,000-லிருந்து ₹3,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் உயிரிழக்க நேரிட்டால், இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக உடனடி நிவாரணமாக ₹20,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


