News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 5, 2026
BREAKING: தமிழகத்தில் பறவை காய்ச்சலா? CLARITY

சென்னையில் கடந்த சில நாள்களாக காகங்கள் தொடர்ச்சியாக உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இது H5N1 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என உறுதிப்படுத்தியுள்ள கால்நடைத்துறை, இறந்த காகங்களை கையால் தொட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், அவற்றை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க உத்தரவிட்டுள்ளது. இதுவரை, பறவை காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
News February 5, 2026
அஜித்குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

தனது மகன் குற்றவாளி இல்லை என்று கோர்ட்டே கூறிவிட்டதாக அவரது தாயார் மாலதி தெரிவித்துள்ளார். காவலாளி அஜித்குமாரின் மரணம் ‘Custodial death’ என CBI தரப்பு மதுரை HC-ல் கூறியிருந்தது. அத்துடன், போலீஸார் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிபதியும் காட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், யார் சொல்லி தனது மகனை கொன்றார்கள் என கேட்டுள்ள தாயார், நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News February 5, 2026
எப்ஸ்டீன் சர்ச்சை.. மன்னிப்பு கோரினார் பில் கேட்ஸ்

எப்ஸ்டீனுடன் செலவழித்த ஒவ்வொரு கணத்திற்காகவும் வருந்துகிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பில் கேட்ஸ் கூறியுள்ளார். முன்னதாக எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும் என அவரது <<19051133>>Ex.மனைவி<<>> கூறியிருந்தார். இந்நிலையில், சிறுமிகள் குறித்து கசிந்த மின்னஞ்சல்களில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.


