News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News January 1, 2026

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரன் கைது

image

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேட்டூரில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மாணவி சற்று மனநலம் குன்றியவர் என்பதால், கூலித் தொழிலாளி சரண் என்பவர் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். தற்போது, போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News January 1, 2026

புத்தாண்டில் கைதான போலி தீர்க்கதரிசி!

image

2025 டிச.25-ம் தேதி உலகம் அழியும் என பீதியை கிளப்பிய எபோ நோவா என்பவரை கானா போலீஸ் கைது செய்துள்ளது. தன்னை தீர்க்கதரிசி என்றும், தான் கட்டி வரும் படகில் ஏறினால் தப்பிக்கலாம் என்றும் கூறி நிதி திரட்டினார். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. மேலும் மக்களிடம் திரட்டிய நிதியில் ஆடம்பர கார் வாங்கியது சர்ச்சையானது. இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி நோவா இன்று கைதாகியுள்ளார்.

News January 1, 2026

இது ஜெயிலா? ஹோட்டலா?

image

நார்வேவின் ஹால்டன் ஜெயில், நவீன வசதிகளுடன் சொகுசு ஹோட்டல் போல் இருக்கிறது. இந்த ஜெயிலில், கடுமையான தண்டனையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக கைதிகளின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கு காணப்படும் திறந்தவெளி பகுதிகள், குற்றங்களை மீண்டும் செய்வதைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே உள்ள ஜெயிலின் போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!