News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 3, 2026
பெரிய கணக்குடன் திமுக கூட்டணியில் சேரும் தேமுதிக!

தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி வைப்போம் பிரேமலதா கடந்த சில நாள்களாகவே வார்த்தை பிசகாமல் பேசி வருகிறார். இந்நிலையில் 18+1 ராஜ்யசபா சீட் என்ற கணக்குடன் திமுக கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடைசி வரை எதிர்பார்த்த ராஜ்யசபா சீட் கானல் நீராய் போனது. இந்நிலையில் ஆளும் திமுக கூட்டணியுடன் தேமுதிக கைகோர்த்துள்ளதாம்.
News February 3, 2026
இளம் வீரனை இழந்தது இந்தியா!

தலைமுறை தலைமுறையாக ராணுவத்தில் சேவையாற்றிய ஒரு குடும்பம், தனது இளம் தலைமுறையை இழந்து நிற்கிறது. சிலிகுரியில் பணியில் இருந்த அக்னி வீரர் கரண் சிங், இன்று வீரமரணம் அடைந்துள்ளார். இவரது தந்தை, 2 மாமாக்கள், அக்கா ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். கரண் சிங்கின் மறைவால் ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த வீரனின் இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நாளை நடைபெற உள்ளது.
News February 3, 2026
சென்சார் போர்டு தேவையே இல்லை: சுமன்

சென்சார் போர்டு இருப்பதே இப்போது தேவையில்லாதது என நடிகர் சுமன் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாவை மட்டும் தான் பார்த்தார்கள் என்ற அவர், ஆனால் இன்று செல்போனிலேயே எல்லாவற்றையும் பார்க்கின்றனர் எனவும், ஆபாசமும் வன்முறையும் அதிகம் உள்ள வெப்சீரிஸுக்கு சென்சாரே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், மொபைல், ஓடிடி என அனைத்துக்கும் சென்சார் வேண்டும். இல்லையென்றால் அது தேவையே இல்லை எனவும் கூறியுள்ளார்.


