News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News January 24, 2026
உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து ஆட்சியர் நேரில்

சின்னசேலம் ஒன்றியம் குதிரைச்சந்தல் கிராமத்தில் உங்கள் கனவை சொல்லுங்க திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கைப்பேசியில் உள்ள செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியை கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் (ஜன.24) ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News January 24, 2026
பண மழை கொட்டும் 3 ராசிகள்

கேது பகவான் நாளை(ஜன.25) பூரம் நட்சத்திரத்தின் 2-வது பாதத்தில் இருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்புள்ளது. *கன்னி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். நிதி நிலைமை மேம்படும். *தனுசு: சேமிப்பு உயரக் கூடும். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
News January 24, 2026
விஜய்க்கு வாழ்த்து சொன்ன சீமான்

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதால், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தவெக மும்முரமாக உள்ளது. இந்நிலையில் விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு விஜய்க்கு தனது வாழ்த்துகளை சீமான் தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் கேட்கும் சின்னம் கிடைக்காது, கிடைத்தாலும் மாற்றிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் சீமான் மைக் சின்னத்தில் நின்றார்.


