News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News January 30, 2026

அரியலூர்: நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அறிவிப்பு

image

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

PT உஷாவின் கணவர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

இந்திய கபடி Ex வீரரும், PT உஷாவின் கணவருமான சீனிவாசன்(64) மரணமடைந்துள்ளார். CISF இன்ஸ்பெக்டரான அவர், நேற்று இரவு கேரளாவின் திக்கோடி உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விஷயமறிந்த PT உஷா டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார். அவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்களும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 30, 2026

EPS-ஐ போல கனிமொழி முகத்தை மூடவில்லை: SP

image

கனிமொழியின் டெல்லி பயணம் குறித்து <<18998266>>EPS<<>> வைத்த விமர்சனத்துக்கு செல்வபெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். EPS போல முகத்தை மூடிக்கொண்டு, மாற்று காரில் சென்று கனிமொழி ராகுல் காந்தியை சந்திக்கவில்லை என அவர் சாடியுள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்குமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து காங்கிரஸின் தலைமையும், திமுகவின் தலைமையையும் இணைந்து முடிவு செய்யும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!