News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 25, 2026
நல்லகண்ணு காலமானார்.. கடைசி PHOTO

மறைந்த கம்யூ., தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு திருமா, எல்.முருகன், நயினார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து CPI தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து நல்லகண்ணுவின் உடல் நாளை தானம் செய்யப்படவுள்ளது. <<-se>>#RIP<<>>
News February 25, 2026
பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியல்

இந்தியாவில் மாநிலங்களின் பெயர் மாற்றம் என்பது சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது வெறுமனே பெயர் மாற்றமாக மட்டுமில்லாமல், ஒரு மாநிலத்தின் பண்பாட்டையும், அடையாளத்தையும் குறிப்பிடும் விதமாகவே மாற்றம் கண்டுள்ளது. தற்போதைய ’கேரளம்’ வரை நாட்டில் இதுவரை பெயர் மாற்றப்பட்ட மாநிலங்கள் என்னென்ன என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம்.
News February 25, 2026
கேரள மக்களை இனி அழைப்பது எப்படி? சசிதரூர்

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்றுள்ள சசிதரூர், ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆங்கிலத்தில் கேரள மக்களை Keralite, Keralan என அழைப்பது வழக்கம். பெயர் மாற்றத்திற்கு ஏற்ப, Keralamite என்றழைப்பது ஒரு நுண்ணுயிரி போலவும், Keralamian என்றழைப்பது அரியவகை கனிமம் போலவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள சசிதரூர், இது தேர்தல் ஸ்டண்ட் என்றும் கிண்டலடித்துள்ளார்.


