News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 5, 2026
மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன் காலமானார்

மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன்(79) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் அகராதி தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ள இவருக்கு, 2013-ல் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கி TN அரசு கௌரவித்தது. சென்னை பல்கலை.,யின் தமிழ் HOD பொறுப்பு வகித்த ஜெயதேவன், மத்திய, மாநில அரசுகள் அமைத்த பல கல்வி குழுக்களுக்கு தலைவராகவும் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெருங்குடியில் இன்று நடைபெற்றது.
News February 5, 2026
234 தொகுதிகளிலும்.. தேமுதிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என பிரேமலதா தெரிவித்துள்ளார். பிப்.6 முதல் பிப்.12 வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படும் என கூறிய அவர், சென்னை ஆபீஸில் 12-ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் மனுக்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். கட்டணமாக பொதுத்தொகுதிக்கு ₹15,000, தனித்தொகுதிக்கு ₹10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
ஹனிமூன் கொலை 2.0: ராஜஸ்தானில் கொடூரம்!

ராஜஸ்தானில் புதுமண தம்பதி வாக்கிங் சென்றபோது, வாகன விபத்தில் கணவர் ஆஷிஷ் உயிரிழக்க, மனைவி அஞ்சுவின் நகைகளை சிலர் திருடி சென்றுள்ளனர். இது விபத்து என கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் ஆஷிஷ் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில், அஞ்சு காதலனுடன் சேர்ந்து ஆஷிஷை கொலை செய்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேகாலயா ஹனிமூன் கொலை போல, இது ராஜஸ்தான் ஹனிமூன் கொலை என குறிப்பிடப்படுகிறது.


