News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News January 25, 2026

பள்ளிகள் விடுமுறை.. கூடுதல் பஸ்கள் அறிவிப்பு

image

பள்ளிகளுக்கான தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடைகிறது. ஊர்களுக்கு சென்றவர்கள் நெரிசலின்றி பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக TN அரசு நாளை சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கவுள்ளது. அதாவது, பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 800 பஸ்களும், மற்ற நகரங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. TNSTC APP மற்றும் இணையதளத்தில் இப்போதே டிக்கெட்களை புக் செய்யுங்க!

News January 25, 2026

EPS-க்கு துரோகத்திற்கான நோபல் பரிசு: உதயநிதி

image

திருவொற்றியூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் EPS-ஐ உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அது EPS-க்கு தான் கொடுக்க வேண்டும் என சாடியுள்ளார். மேலும் அமித்ஷாவின் முரட்டு அடிமை EPS தான் எனவும், ஹிந்தி திணிப்பு குறித்து அவரிடம் கேட்டால், ஹிந்தியை திணித்தால் என்ன என்று கேட்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News January 25, 2026

படுக்கையறையை பராமரியுங்கள்… மகிழ்ச்சி கூடும்

image

வரவேற்பறை மற்றும் வீட்டின் பிற அறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படுக்கையறைக்கு நாம் கொடுப்பதில்லை. இதனால் தூக்கத்தின் தரம் கெடுகிறது, மன அழுத்தம் அதிகரிக்கிறது, பல நோய்களும் கூட ஏற்பட காரணமாகிறது. படுக்கை அறையை சரியாக பராமரித்தால், உங்கள் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தாம்பத்ய வாழ்க்கையும் கூட மேம்படும் என்கின்றனர் மனநல டாக்டர்கள்.

error: Content is protected !!