News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News February 21, 2026

10% வரி மட்டுமே.. இந்தியாவுக்கு நற்செய்தி

image

டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அமெரிக்க SC உத்தரவிட்டதையடுத்து, உலக நாடுகள் மீது அவர் விதித்த அனைத்து வரிகளும் ரத்தாகியுள்ளன. இதையடுத்து, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 10% வரியை டிரம்ப் விதித்துள்ளார். ஏற்கெனவே, இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை டிரம்ப் 25% இருந்து 18% ஆக குறைத்த நிலையில், தற்போது அது 10% ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பிப்.24 முதல் அமலுக்கு வரும்.

News February 21, 2026

OPS-ன் திமுக ஆதரவால் மீண்டும் அரசியல் மோதலா?

image

OPS-ன் திடீர் திமுக ஆதரவு, அவர் விரைவில் திமுக கூட்டணியில் இணைவதற்கான சமிக்ஞையே என கூறப்படுகிறது. ஒருவேளை அவர் திமுகவோடு இணைந்தால், தேனி திமுக முகமாக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் உடன் மீண்டும் மோதல் உண்டாகும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தொகுதி போட்டி, ஆதரவாளர்கள் மோதலும் உண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது. என்ன முடிவெடுப்பார் ஓபிஎஸ்? உங்கள் கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News February 21, 2026

BREAKING: அதிமுக வெளியிட்ட முக்கிய ஆதாரம்!

image

அமைச்சர் KN நேரு மீதான ₹ 1,020 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, ED அனுப்பிய கடிதத்தின் முக்கிய ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. ஆவணத்தின் 51-வது பக்கத்தில் டெண்டர்களுக்காக 7.5% – 10% வரை கட்சி நிதி(Party Fund) பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர், அவரது மகனை காப்பாற்றவே காவல்துறை FIR பதிவு செய்யாமல் இருப்பதாகவும் சாடியுள்ளது.

error: Content is protected !!