News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News January 28, 2026

அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்: மம்தா பானர்ஜி

image

அஜித் பவாரின் மறைவை சுட்டிக்காட்டி, அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். NDA-வில் இருந்த அஜித் பவார் வெளியேற இருந்த சூழலில் இந்த விபத்து நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், SC கண்காணிப்பில் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். SC தவிர்த்து வேறு எந்த அமைப்பின் மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.

News January 28, 2026

மாதம் ₹6000 வரை கிடைக்கும்

image

தீன் தயாள் உபாத்யாயா ஊரக திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வேலையில்லாத கிராமப்புற இளைஞர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியை முடித்து வேலையில் சேர்பவர்களுக்கு வேலை செய்யும் நிறுவனம், 2 – 6 மாதங்களுக்கு ₹6,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது. இதில் 15 – 35 வயதுடைய, 10-வது தேர்ச்சி பெற்ற கிராமபுற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். <>Click Here<<>>. SHARE.

News January 28, 2026

நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒற்றை தமிழ் குரல்!

image

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு ஆற்றிய உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பேசினார் CP ராதாகிருஷ்ணன். முன்னதாக தனது உரையை தமிழில் தொடங்கிய அவர், தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் நாம் அனுதினமும் வழிபடுகின்ற புனித பாரத அன்னையின் பொற்பாதங்களை வணங்குவதாக கூறினார். மேலும், ஜனநாயக நாட்டில் பல முரணான கருத்துகள் இருந்தாலும், சில விஷயங்களில் இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்றார்.

error: Content is protected !!