News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 16, 2026
சற்றுமுன்: விலை தலைகீழாக குறைந்தது!

2 வாரங்களில் வெள்ளி விலையில் நிகழ்ந்த மாற்றம் முதலீட்டாளர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாத இறுதியில் கிலோ ₹4,25,000-க்கு விற்பனையான வெள்ளி இன்று ₹2,65,000 என தலைகீழாக குறைந்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனவே வெள்ளியில் முதலீடு செய்ய நினைப்போர் சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே!
News February 16, 2026
BREAKING: நீதிபதி மீது அரிவாள் வீச்சு!

ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுதாகர் மீது, செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அரிவாள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். தனது மனைவி தங்க முனீஸ்வரியுடன் நடந்து வரும் விவாகரத்து வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால் ஆத்திரத்தில் இந்த செயலை செய்துள்ளார். நீதிமன்ற வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட ஆயுதம் எப்படி வந்தது என்பது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News February 16, 2026
சமையல் உப்பில் சுண்ணாம்பா.. கண்டுபிடிப்பது எப்படி?

உப்பில் கூடவா கலப்படம் என நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மைதான் என TN உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கிறது. உப்பில் கலப்படம் உள்ளதா என்பதை அறிய இந்த ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்க. தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பை போட்டு நன்றாக கலக்கவும். *சுத்தமான உப்பு என்றால், தண்ணீர் தெளிவாக இருக்கும் *கலப்படமானது என்றால் தண்ணீர் மங்கலாகி, கிளாஸின் அடியில் தூசி போன்ற படிமன் தங்கும். இந்த விழிப்புணர்வு பதிவை பகிரவும்.


