News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 27, 2026
அதிமுகவை பிடித்திருந்த சனி ஒழிந்தது: சி.வி.சண்முகம்

OPS திமுகவில் இணைந்ததை குறிப்பிட்டு, இன்றுதான் அதிமுகவுக்கு பொங்கல், தீபாவளி என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் வெற்றியை நோக்கி அதிமுக செல்லும் போது, எங்களை பிடித்திருந்த சனி ஒழிந்தது என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவை முடக்க பார்த்தவர் OPS என்றும், திமுகவின் பி டீமாக அவர் செயல்படுகிறார் என்று சொன்னதும் இன்று உண்மையாகியுள்ளதாவும் சாடியுள்ளார்.
News February 27, 2026
1 கோடி இளம் வாக்காளர்கள்.. யார் வாக்கு வங்கிக்கு ஆபத்து?

22 – 29 வயதுடைய வாக்காளர்கள் 1 கோடி பேர் தமிழகத்தில் உள்ளதாக CEC ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். இளம் தலைமுறையான இவர்களின் வாக்குகளே, 2026 தேர்தலை தீர்மானிக்கப் போகின்றது. திமுக, அதிமுகவின் வெற்றி, தோல்வியை முடிவுசெய்வதோடு, நாதக, தவெகவின் பிரதான வாக்கு வங்கியாகவும் இவர்கள் இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News February 27, 2026
மகள் காதல் திருமணம்.. வீட்டை இடித்து தள்ளிய தந்தை!

எதிர்ப்பை மீறி, மகள் காதல் திருமணம் செய்ததை பொறுக்க முடியாத தந்தை செய்த செயல் அதிரவைக்கிறது. ம.பி.,யின் குவாலியரில் இருந்த மாப்பிள்ளையின் வீட்டை, பெண்ணின் தந்தை இரவில் புல்டோசர் வைத்து இடித்து தள்ளியுள்ளார். 5 மாதம் முன்பு நிகழ்ந்த சம்பவத்தால் பயந்து போன மாப்பிள்ளையின் வீட்டார் வெளியூருக்கு ஓடியுள்ளனர். தற்போது சொந்த ஊருக்கு திரும்பி தைரியத்தை வரவழைத்து கொண்டு, போலீஸில் புகார் அளித்துள்ளனர்.


