News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News December 14, 2025
ஒரே முள்ளங்கியில் இத்தனை நன்மைகளா?

பலரும் சாப்பாட்டில் ஒதுக்கி வைக்கும் முள்ளங்கியில் ஓராயிரம் நன்மைகள் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *முள்ளங்கியில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ரசாயனம் உள்ளதாம். *நீரிழிவு நோய் உருவாவதைத் தடுக்க உதவும் ஆக்சிஜனேற்ற ஆற்றலும் இருக்கிறதாம். * கல்லீரல் சேதத்தில் இருந்து பாதுகாக்கும் கலவைகளும் உண்டாம். கேன்சரை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களிலிருந்து உடலில் உள்ள செல்களை பாதுகாக்குமாம். Share it
News December 14, 2025
மத்திய அமைச்சருக்கு ISI அமைப்பால் ஆபத்து

மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகானுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI-யால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவருக்கான பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. ISI அமைப்பு மத்திய அமைச்சர் குறித்த முக்கிய தகவல்களை திரட்டியதால் உளவுத்துறை உஷாராகியுள்ளது.. அவருக்கு ஏற்கெனவே Z+ பாதுகாப்பு இருந்தும், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்

*எதிர்காலத்தைக் கணிப்பதற்கான மிகவும் நம்பகமான வழி, அதை உருவாக்குவதுதான். *எதிர்ப்பது உங்கள் கடமையாக இருக்கும்போது, அமைதியாக இருப்பது பாவச்செயலாகும்.*ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது. *ஒரு மரத்தை வெட்டுவதற்கு ஆறு மணிநேரம் அவகாசம் கொடுங்கள், நான் முதல் நான்கு மணிநேரம் கோடரியைக் கூர்மைப்படுத்துவேன். *மேகத்தின் பின்னால் இருந்தாலும், சூரியன் இன்னும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.


