News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News December 9, 2025

மிக அழகான பெண்களை கொண்ட 10 நாடுகள்!

image

அழகு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கண்ணோட்டத்தை பொறுத்தது. இருப்பினும் பண்பாடு, பெண்களின் தோற்றம், உடற்தகுதி, வாக்கெடுப்பு என பல்வேறு காரணிகளை கொண்டு அழகான பெண்கள் அதிக உள்ள நாடுகள் பட்டியலிடப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் எதுன்னு தெரியுமா? மேலே SWIPE பண்ணி பாருங்க.

News December 9, 2025

பங்குச்சந்தைகள் தொடர் சரிவு: காரணம் இதுதான்

image

இந்திய பங்குச்சந்தைகள் தொடர் <<18510677>>சரிவை<<>> சந்தித்து வருகின்றன. இதற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு (1$ – ₹90.15) சரிவு, இந்தியா – USA இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நிச்சயமற்ற தன்மையில் உள்ளது காரணமாக கூறப்படுகின்றன. அந்நிய நிறுவன முதலீட்டார்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவது, ஜப்பானிய பத்திரம் விலை உயர்வு, விரைவில் வெளியாகவுள்ள USA ஃபெடரல் வட்டி விகித முடிவும் காரணங்களாக உள்ளன.

News December 9, 2025

BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

image

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் <<18509484>>கே.கே.செல்வம்<<>> மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதால், அவரது அண்ணன் மகனான கே.கே.செல்வத்துடன் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், செங்கோட்டையனுக்கு அளித்த முக்கியத்துவம் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், EPS முன்னிலையில் கே.கே.செல்வம் அதிமுகவில் இணைந்துள்ளார்.

error: Content is protected !!