News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 11, 2026
இந்தியாவில் ஊழல் குறைந்தது.. ஆய்வு சொல்வது என்ன?

இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் கூறியுள்ளது. 2024-ல் ஊழல் குறியீட்டில் 182 நாடுகளில் 96-வது இடத்தில் இருந்த இந்தியா, 1 பாயிண்ட் குறைந்து 2025-ல் 91-ல் உள்ளது. டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர் ஊழல் குறைந்த நாடுகளாக உள்ளன. சூடான், சோமாலியா ஊழல் மிகுந்த நாடுகளாக உள்ளன. மேலும், டிரம்ப் ஆட்சிக்கு பின் USA-ல் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் கருத்து?
News February 11, 2026
விஜய்யின் EX மேலாளருக்கு திமுகவில் முக்கிய பதவி!

விஜய் உடன் நீண்ட காலமாக பயணித்து அண்மையில் திமுகவில் இணைந்த அவரது EX மேலாளர் PT செல்வகுமாருக்கு திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், OPS ஆதரவாளராக இருந்து பின், திமுகவில் ஐக்கியமான அதிமுக EX MLA சுப்புரத்தினத்திற்கு செய்தித் தொடர்பு துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுக் கட்சியில் இருந்து வருவோருக்கு உடனடி பதவியா எனவும் திமுகவில் புகைச்சல் எழுந்துள்ளதாம்.
News February 11, 2026
ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்

மாசி மாத பூஜைகளை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (பிப்ரவரி 12) திறக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் 17-ம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் காலையில் நெய்யபிஷேகமும், இரவில் படி பூஜைகளும் நடைபெறவுள்ளன. ஐயப்ப பக்தர்கள் பெரும் திரளாக வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


