News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News March 1, 2026

மூண்ட போர்.. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

image

ஈரான் – USA போரால், இவ்விரு நாடுகளுடனும் நட்புறவில் உள்ள இந்தியா 4 முக்கிய பிரச்னைகளைச் சந்திக்கவுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சா எண்ணெய் உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தங்கம் விலை அதிகரிப்பு, ஈரானில் இந்திய முதலீடு செய்துள்ள சபாஹர் துறைமுகத் திட்டம் & வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு ஆகிய பாதிப்புகளை இந்தியா எப்படி சமாளிக்க போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

News March 1, 2026

வருமான உச்சவரம்பை ₹8,000 ஆக உயர்த்தினார் CM ஸ்டாலின்

image

அரசுப் பணியில் பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய 30% இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கென 10% உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பு ₹4,000-லிருந்து ₹8,000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேநேரம், கணவரை இழந்தவர்கள் மட்டுமே இப்பிரிவில் வருவார்கள். விவாகரத்து பெற்றவர்கள் இதன் கீழ் சலுகை கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 1, 2026

இந்திய பூர்வீகம் கொண்ட கமேனி.. எப்படி தெரியுமா?

image

தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள ஈரான் உயர் தலைவர் கமேனியின் குடும்பம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. அவரது தாத்தா சையது அகமது முசாவி உ.பி.,யின் பாரபங்கி அருகே கிண்டூர் என்ற கிராமத்தில் பிறந்துள்ளார். பிறகு, ஈராக் சென்ற அவர், அதனை தொடர்ந்து ஈரானில் குடியேறியுள்ளார். முசாவியின் மூலம் அரசியலில் ஆர்வம் கொண்ட கமேனி 1970-களில் இஸ்லாமிய புரட்சி படைக்கு தலைமை தாங்கி ஈரானின் உயர் தலைவரானார்.

error: Content is protected !!