News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 7, 2026
ஆபாச படம் பார்க்கிறீர்களா.. 7 ஆண்டு சிறை உறுதி

ஸ்மார்ட் போன்களை வாழ்வின் ஒரு அங்கமாகவே கொண்டுள்ள இன்றைய உலகில் பலரும் பாலியல் வீடியோக்களுக்கு அடிமைகளாக உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. சிறார் பாலியல் வீடியோக்கள் (Child Videos) பார்ப்பதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனராம். இதனை பார்த்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ₹10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பதை மறவாதீர்கள். இம்மாதிரியான தேடுதல் போலீஸாரால் கண்காணிக்கப்படுவதையும் நினைவில் கொள்ளுங்கள்.
News February 7, 2026
ஜெ., பாணியில் ஜாதகத்தை கேட்கிறாரா விஜய்?

விருப்ப மனுவுடன் வேட்பாளர்களின் ஜாதகத்தையும் தவெக சேர்த்து வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் மூலம் அறிமுகமான பெங்களூரு ஜோசியர் மீது விஜய்க்கு பெருத்த நம்பிக்கை வந்துள்ளதால், அவரது அறிவுறுத்தலின்படி வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளாராம். 2009 தேர்தலில் வேட்பாளர்களின் ஜாதகத்தையும் ஜெ., கேட்டிருந்ததாக கூறப்படுவதால், அதே ஃபார்முலாவை விஜய் ஃபாலோ செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News February 7, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு <<19072951>>இந்தியா<<>> ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரம், இனி வெனிசுலாவிலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டுவர ஆகும் செலவு அதிகரிக்கும். இதனால், அதனை ஈடு செய்ய பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய FM நிர்மலா, நாட்டு மக்களுக்கு எதிரான எந்த முடிவையும் அரசு எடுக்காது என்று மட்டுமே பதிலளித்தார். உங்கள் கருத்து என்ன?


