News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 20, 2026
BREAKING: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கும் NMMS தேர்வு ஜன.10-ல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
News February 20, 2026
விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்கு சாதகம்: துரை வைகோ

தமிழ்நாட்டுக்கு பாஜக இழைத்த அநீதிகள் குறித்து விஜய் வாய்திறக்கவில்லை என துரைவைகோ குற்றம்சாட்டியுள்ளார். 2026 தேர்தலில் விஜய் 15% வாக்குகள் வாங்கலாம், ஆனால் அவரால் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதேசமயம், திமுக ஆட்சியின் மீது உள்ள அதிருப்தி வாக்குகளையே விஜய் பிரிப்பார் என நம்புவதாகவும், அது திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News February 20, 2026
ஆண்களுக்கு சக்தி கொடுக்கும் புளிச்ச கீரை!

புளிப்பு சுவை கொண்டதால் பலரும் புளிச்ச கீரையின் பக்கம் செல்வது இல்லை. ஆனால் அதில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதனை தவிர கண் பார்வையை மேம்படுத்த, எடையை குறைக்க, எலும்புகளை வலுப்படுத்த, ரத்த சோகையை சரி செய்ய இந்த கீரை முக்கிய பங்காற்றுகிறதாம். அதைவிட ஆண்மை குறைபாடுள்ளவர்களுக்கு புளிச்ச கீரை ரொம்பவே நல்லதாம். Share it


