News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News March 2, 2026

BREAKING: திமுக முடிவு.. திருமாவளவன் அதிர்ச்சி

image

திமுக கூட்டணியிலுள்ள தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்க CM ஸ்டாலின் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், ராஜ்யசபா MP பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 6 + 1 சீட் கொடுக்க திமுக சம்மதித்ததாக கூறப்பட்டது. இது, இன்று ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ள விசிகவுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

News March 2, 2026

உங்க வீட்டிலும் இதை கண்டிப்பா பண்ணுங்க!

image

சம்மர் சீசன் தொடங்குவதற்கு முன்பே, வெப்பநிலை அதிகரித்து நாம் இன்னலை சந்திக்கிறோம். இதனால் அதிகளவில் தண்ணீரை பருகும் படி டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விலங்குகள், பறவைகள் நிலை என்ன? தண்ணீருக்காக அவை போராடுகின்றன. வீட்டு வாசலில் நீர் தொட்டிகளில் தண்ணீரையும், சில உணவு தானியங்களையும் பறவைகளுக்காக வையுங்கள். இது ஒரு அடிப்படை மனிதாபிமானம். SHARE IT.

News March 2, 2026

தவெக கூட்டணி முடிவு எப்போது? செங்கோட்டையன்

image

மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் கூட்டம் என தவெகவும் ஒருபுறம் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்தும் தவெகவுடன் இதுவரை பெரிய அளவிலான கூட்டணி அமையவில்லை. இந்நிலையில், தவெக கூட்டணி குறித்த அறிவிப்பை விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும், அது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!