News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News March 4, 2026

உத்திரமேரூர் அருகே விரைவில் மினி ஸ்டேடியம்!

image

காஞ்சி: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சிறிய விளையாட்டு அரங்கம் (Mini Stadium) கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிலத்தின் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

News March 4, 2026

தவெகவில் அந்த நடிகையா?

image

விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் எனக்கூறி மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், விவாகரத்துக்கு முக்கிய புள்ளியாக இருந்த அந்த நடிகையை தவெகவில் இணைத்தால் கட்சிக்கு கூடுதல் வசீகரம் கிடைக்கும், தேர்தல் நேர பிரசாரத்துக்கும் உதவும் என விஜய் திட்டமிட்டதாக வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது தவறான செய்தி என்று தவெகவினர் கமெண்ட் செய்கின்றனர்.

News March 4, 2026

20 நாளில் வங்கிக் கணக்கில் ₹9000… TN அரசு இன்ப செய்தி

image

பிப்., மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ₹3,000+ கோடைகால சிறப்பு நிதி ₹2000 என மொத்தம் ₹5000 கடந்த பிப்.13-ல் வரவு வைக்கப்பட்டது. நேற்று முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200+ கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3200, மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500+ ₹2000 என மொத்தம் ₹3500, மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு ₹4000 என 20 நாளில் ஏறக்குறைய <<19286458>>₹8,200 – ₹9000<<>> வரை TN அரசு வழங்கியுள்ளது.

error: Content is protected !!