News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 10, 2026
சற்றுநேரத்தில் ஜனநாயகன் பட வழக்கில் தீர்ப்பு

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக மறுஆய்வுக் குழுவை படக்குழு அணுகியுள்ள நிலையில், வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவாளருக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று இவ்வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வந்தவுடன் படக்குழு அடுத்தகட்ட அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 10, 2026
திமுகவிலும் விஜய் ரசிகர்கள்: ஒப்புக்கொண்ட அப்பாவு

வரும் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகள், கணிசமாக விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு, விஜய் ஒரு நடிகர்; அவருக்கான ரசிகர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக என அனைத்து கட்சிகளிலும் இருப்பார்கள் என அப்பாவு தெரிவித்தார். ஆனால், திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதால், மு.க.ஸ்டாலினை மக்கள் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.
News February 10, 2026
திமுக மன்னிப்பு கேட்குமா?

திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் கிளையின் தீர்ப்பு செல்லும் என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள பாஜகவின் வினோஜ் பி செல்வம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்நோக்கம் இருப்பதாக தவறான குற்றச்சாட்டை பரப்பி, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்த திமுக மன்னிப்பு கேட்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


