News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News December 21, 2025
சீனாவுக்கு கிடைத்த தங்க புதையல்!

கிழக்கு சீனக்கடலில் லாய்சோ கடற்கரைக்கு அருகே, ஆசியாவிலேயே கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க படிமத்தை சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா இருந்தாலும், தங்க கையிருப்பில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்திலேயே உள்ளது. இங்கு சுமார் 3,900 டன் தங்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில், தங்க கையிருப்பிலும் சீனா முதல் இடத்தை பிடித்துள்ளது.
News December 21, 2025
அண்ணாமலைக்கு BIG NO.. EPS-ன் அடுத்த டிமாண்ட் இதுவா?

ஏற்கெனவே அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கிய பிறகே அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தது. இதுபோதாதென்று மேலும் மேலும் டிமாண்டுகளை தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் பியூஸ் கோயலிடம் அடுக்குகிறாராம் EPS. அதாவது, அதிமுகவுக்காக அண்ணாமலை பிரசாரம் செய்யக்கூடாது எனவும், டிடிவி, OPS இடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும் பல கண்டிஷன்களை EPS போடுகிறார் என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News December 21, 2025
7 வயது சிறுமியை வீட்டோடு தீ வைத்து எரித்த கொடூரம்!

கலவர பூமியாக மாறியுள்ள வங்கதேசத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று நெஞ்சை உலுக்குகிறது. லக்ஷ்மிபூர் பகுதியிலுள்ள BNP (பங்களாதேஷ் தேசியக்கட்சி) தலைவர் ஒருவரின் வீட்டை வெளிப்புறமாக பூட்டிய போராட்டக்காரர்கள், தீ வைத்துள்ளனர். இதில், பெரியவர்கள் தீக்காயங்களுடன் தப்பித்து விட்ட நிலையில், ஆயிஷா அக்தர் என்ற 7 வயது சிறுமி துடிதுடித்து மரணமடைந்துள்ளார். தீ விபத்தில் மேலும் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.


