News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News December 18, 2025
ராசி பலன்கள் (18.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 18, 2025
வரைவு வாக்காளர் பட்டியல்: ECI அறிவுறுத்தல்

டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவுள்ளது. இதன் பின்னர் வாக்காளர்கள் தங்களது விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளம் (DEO) மூலம் அறிந்துகொள்ளலாம். இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் அதே இணையதளத்தில் சரிபார்க்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
News December 17, 2025
EX IPS vs EX IRS: ‘கம்முனு இருந்திருந்தால்..’

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் <<18586251>>தவெக நிலைப்பாடு<<>> என்ன என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தவெகவின் அருண்ராஜ், அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், பதவியில் நீடித்திருப்பார் என பதிலளித்தார். ஆனால், கம்முனு இருந்து ஜால்ரா அடித்து பொறுப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், மோடிக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்றும் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.


