News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News December 12, 2025
தமிழ்நாட்டில் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

செதுக்கப்பட்ட பழங்கால கோயில்கள், அழகிய கடற்கரை, மேகங்களுக்குள் மறைந்திருக்கும் சிகரங்கள் என தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடமும் ஒரு தனித்துவ அழகை கொண்டது. அந்த வகையில், நாம் வாழ்நாளில் நிச்சயம் பார்க்கவேண்டிய சில இடங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News December 12, 2025
தமிழ் நடிகை பலாத்காரம்.. பரபரப்பு தீர்ப்பு

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நடிகை பாலியல் வழக்கில், 6 பேர் குற்றவாளிகள் என கடந்த சில நாள்களுக்கு முன்பு எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், இதில் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நடிகர் <<18502283>>திலீப்<<>> உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
வங்கி கணக்கில் ₹1,000.. CM ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சற்றுமுன் CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைத்துள்ளார். புதிதாக 17 லட்சம் பேரின் வங்கி கணக்கில் ₹1,000 உரிமைத்தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பயனாளிகளுக்கு CM ஸ்டாலின் கூறியதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த ₹1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை என குறிப்பிடப்பட்டுள்ளது.


