News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News February 26, 2026

திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

image

அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்தையொட்டி, <<19236842>>குமரி, தென்காசி, நெல்லையை<<>> தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும், மாசி மக திருவிழாவையொட்டி மார்ச் 2-ல் (திங்கள்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News February 26, 2026

நல்லகண்ணுவை பின்பற்றும் அரசியல்வாதி யார்?

image

நல்லகண்ணு தன் பெயருக்கேற்றபடி வாழ்வில் நல்ல பார்வை கொண்டிருந்தவர் என பார்த்திபன் கூறியுள்ளார். செய்தியாளா்களிடம் பேசிய அவர், நல்லகண்ணுவுக்கு மாலை போட்ட அரசியல்வாதிகளில் மிகச்சிலரை தவிர, அவரை பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். அத்துடன் வரும் தேர்தலில் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்காமல் ஓட்டுப்போடுவதே, நல்லகண்ணுவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என பேசியுள்ளார்.

News February 26, 2026

அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. வழக்கில் தொடர்புடைய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மதுரை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், அவருடன் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் உள்ளிட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!