News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 19, 2026
BIG FLASH: தங்கம் விலை ஒரே அடியாக மாறியது

சர்வதேச சந்தையில் கடந்த 3 நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸுக்கு(28g) $91 அதிகரித்து $4,979-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் $3 அதிகரித்து $77-ஆக உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சென்னையில் கடந்த 3 தினங்களாக சவரனுக்கு ₹2,640 விலை குறைந்தது கவனிக்கத்தக்கது.
News February 19, 2026
FLASH: நள்ளிரவில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 விசைப்படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்ட உடைமைகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. நேற்று முன்தினம் <<19154691>>காரைக்கால் மீனவர்கள் 25 பேரை <<>>கைது செய்த நிலையில், மீண்டும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
News February 19, 2026
மகளிருக்கு மாதம் ₹5000 வழங்கலாம்: கார்த்தி சிதம்பரம்

மகளிருக்கு கொடுக்கும் பணம் அரசின் கடன் சுமையை அதிகரிக்கும் என்றாலும், வரிகள் மூலம் அந்த பணம் அரசுக்கு வந்துவிடும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். பெண்களுக்கு மாதம் ₹2,500 கொடுப்பது நல்ல பொருளாதார யுக்தி என தெரிவித்த அவர், பெண்கள் மளிகை கடைகளில்தான் இதை செலவு செய்ய போகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மாதம் ₹5000 கொடுத்தாலும் தப்பில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


