News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News January 24, 2026
புதுக்கோட்டை: லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருமயம் அருகே உள்ள வெங்களூர் சாலையில் நேற்று பைக்கில் பன்னீர்செல்வம் (63), சாந்தி (55) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
இந்த வித்தியாசமான Diet குறித்து உங்களுக்கு தெரியுமா?

OMAD டயட் என்பதன் விரிவாக்கம் ‘One Meal A Day’. ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே உண்பார்கள். அதில் ஒரு நாளைக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு உணவிற்கு இடையில் 23 மணி நேரம் இடைவேளை இருக்கும். இது எடை குறைப்புக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதில் பல ஆபத்துகளும் உள்ளன. இந்த டயட்டை மேற்கொள்வதற்கு முன் டாக்டரை அணுக வேண்டும். SHARE.
News January 24, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சி செய்தி

CM ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் திருத்தச் சட்ட மசோதா, பிச்சை எடுப்பதை தடுத்தல் உள்ளிட்ட 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.


