News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 10, 2026
என்ன HairCut பண்ணனும் தெரியலயா? APP கிட்ட கேளுங்க

உங்கள் முகத்துக்கு எந்த மாதிரியான Hairstyle எடுப்பாக இருக்கும் என தெரியவில்லையா? அந்த பிரச்னையை சரி செய்ய ஒரு செயலி இருக்கிறது. Playstore-ல் உள்ள ‘HiFace’ (அ) Hairstyle Try On ஆகிய செயலிகளின் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்து, அதில் செல்ஃபியை அப்லோடு செய்தால் போதும். முகத்திற்கு ஏற்ற Beard Style, Hairstyle, Sunglasses-ஐ அதுவே பரிந்துரைக்கும். இது சொல்வதை போல நீங்கள் Try செய்து பாருங்கள். SHARE.
News February 10, 2026
EXCLUSIVE: அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு

தமிழக பாஜக சக்தி கேந்திராவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்.14-ம் தேதி அமித்ஷா சேலம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாம். சக்தி கேந்திரா என்பது தேர்தல், கட்சிப் பணிகளை வலுப்படுத்தும் பிரிவு ஆகும். வாக்குச்சாவடிகள், பிரசாரம் உள்ளிட்ட பணிகள் இதன் கீழ்தான் வருகின்றன. சுமார் 25,000 பேர் இந்த பிரிவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
News February 10, 2026
சிக்கன் சாப்பிடுவோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை

TN-ல் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், சிக்கன் சாப்பிடுவோர் நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் எனவும், ஆப் பாயில் சாப்பிட வேண்டாம் என்றும் கூறினார். மேலும், மர்மமான முறையில் உயிரிழந்த கோழிகளை சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


