News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News January 21, 2026
விஜய்யை விளாசிய கருணாஸ்

திமுகவை தீய சக்தி என விமர்சிக்கும் விஜய் என்ன சக்தி என கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் முதலில் தமிழனாக இருக்க வேண்டும் என்றும், தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களின் வாக்கு உங்களுக்கு வேண்டும், ஆனால் அவர்களின் வாழ்க்கை உங்களுக்கு வேண்டாமா எனவும் கருணாஸ் ஆவேசமாக தெரிவித்தார்.
News January 21, 2026
இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு

சுவீட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான வரவேற்பு நிகழ்ச்சிக்கு 7 இந்திய தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், விப்ரோ CEO ஸ்ரீனிவாஸ், இன்ஃபோசிஸ் CEO சலீல் பரேக், பஜாஜ் ஃபின்சர்வ் தலைவர் சஞ்சீவ், மஹிந்திரா CEO அனிஷ் ஷா மற்றும் ஜூபிலண்ட் தலைவர் பார்தியா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
News January 21, 2026
தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியுள்ளார். மேலும் TN போராட்டக்களமாக மாறியுள்ளதாகவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ அரசு விரும்பவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். அரசு நிர்வாகத்தின் முதுகெழும்பாக உள்ள ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


