News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News January 20, 2026
இப்படி ஒரு அநாகரிக கவர்னரை TN கண்டதில்லை: SP

சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு களங்கத்தை கவர்னர் RN ரவி ஏற்படுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மேலும், மரபுப்படி தேசிய கீதம் இறுதியில் பாடப்படும் என சபாநாயகர் கூறியும் கவர்னர் ஏற்கவில்லை என்றும், மைக் ஆஃப் செய்யப்பட்டது என அப்பட்டமாக பொய் பேசும் இப்படி ஒரு அநாகரிக கவர்னரை TN சட்டமன்றம் இதுவரை கண்டதில்லை எனவும் SP வேதனை தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்கிறேன்: கனிமொழி

மதம், மொழி, அடையாளங்களை கடந்து நிற்கும் ஒரு கலைஞனை திட்டமிட்டு குறி வைப்பதும், அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மௌனமும் வருத்தமளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். <<18883288>>ஏ.ஆர்.ரஹ்மான்<<>> நாட்டின் இசையை உலகிற்கு கொண்டு சென்ற படைப்பாளி மட்டுமல்ல; இந்தியாவின் கலாசார விழுமியங்களின் முதன்மையான தூதர் என்று கூறியுள்ளார். தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 20, 2026
‘ஜன நாயகன்’ பட வழக்கு.. ஐகோர்ட் அதிரடி

‘ஜன நாயகன்’ பட விவகாரம் தொடர்பான வழக்கு <<18907367>>விசாரணையில்<<>> இரு தரப்பு வாதங்களையும் சென்னை HC கேட்டது. இதனையடுத்து அதிரடி கருத்துகளை கூறிய நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். குறிப்பாக, அரை மணி நேரத்தில் வாதத்தை முடித்திருந்தால் இன்றே தீர்ப்பை வழங்கி இருப்போம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.


