News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News February 20, 2026

BREAKING: திமுகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு கொடுத்தார்

image

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று திமுக கூட்டணிக்கு ஆதரவாக OPS பேசியுள்ளது அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CM ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்தபின் OPS செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் 5 ஆண்டுகால சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழல், ஸ்டாலினின் சிறப்பான 5 ஆண்டுகால ஆட்சி காரணமாக திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

துரைமுருகன் இடத்தில் அன்பில் மகேஸ்.. என்ன ஆச்சு?

image

சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று அவை முன்னவர் துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஸ் அமர்ந்திருந்தார். உடல் நலக்குறைவால் இன்றைய கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்காத நிலையில், காலியாக இருந்த அவ்விருக்கையில் அன்பில் அமரவைக்கப்பட்டார். ஆனால், சீனியர்கள் பலர் இருக்கும் போது, அவை முன்னவர் அமர்ந்த இருக்கையில் ஜூனியர் அமைச்சர் ஒருவரை உட்காரவைத்தது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

News February 20, 2026

புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

image

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால், நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். பிப்.22-ல் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.

error: Content is protected !!