News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News January 26, 2026
தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

<<18961392>>தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம்<<>> மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த தமிழறிஞரும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் Ex துணை தலைவருமான தெ.ஞானசுந்தரம் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இலக்கிய ஆய்வாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்ட அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
News January 26, 2026
FLASH: நாளை வங்கிகள் இயங்காது!

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாளை நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என வங்கி ஊழியர்கள் சங்கம்(AIBEA) தெரிவித்துள்ளது. போராட்டத்தின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் AIBEA வேண்டுகோள் விடுத்துள்ளது. LIC-ல் 100% அந்நிய முதலீடு, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
News January 26, 2026
பழமா… ஜூஸா? எது பெஸ்ட் தெரியுமா?

பழங்களில் இயற்கை சர்க்கரையும் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. ஆனால், அதனை ஜூஸ் ஆக்கும்போது நார்ச்சத்துக்கள் உடைகின்றன. ஒரு கிளாஸ் ஜூஸுக்கு இரண்டு, மூன்று பழங்களை பிழிவதால் அளவுக்கதிகமான சர்க்கரை உடலில் சேர்கிறது. பழங்களை அப்படியே சாப்பிடும்போது அதிலுள்ள கலோரிகளில் 10% அதனை செரிமானம் செய்ய காலியாகிவிடும். ஆனால், ஜூஸாக குடிக்கும்போது அத்தனை கலோரியும் உடலில் சேர்ந்து தீங்கு விளைவிக்கிறது.


