News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News February 16, 2026

தவெகவுடன் காங்., கூட்டணி இல்லை: கோபண்ணா

image

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸில் ஒரு தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி சேர எந்த வாய்ப்பும் இல்லை என காங்., துணைத்தலைவர் கோபண்ணா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கொள்கையே இல்லாத ஒரு கட்சியை விஜய் நடத்தி வருவதாகவும் சாடியுள்ளார்.

News February 16, 2026

வரி காட்டாதவர் நாட்டை காப்பாற்றுவாரா? KP முனுசாமி

image

சினிமாவில் ஷோ காட்டி விட்டு இப்போது கட்சி ஆரம்பித்து முதல்வராக ஆசைப்படுகிறார் என விஜய்யை KP முனுசாமி விமர்சித்துள்ளார். வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல், அதை கண்டுபிடித்தவுடன் கோர்ட்டுக்கு சென்றவர், நாட்டை காப்பாற்றுவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவில் பணம், பதவியை அனுபவித்துவிட்டு, இப்போது பதவிக்காக நடிகர் கட்சியில் இணைந்துள்ளதாக செங்கோட்டையனையும் அவர் சாடியுள்ளார்.

News February 16, 2026

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. உறுதியானது

image

நீண்ட இழுபறிக்கு பின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் SP <<19152584>>வேலுமணி, பிரேமலதா<<>> இருவரும் ஒன்றாக கலந்துகொண்டதே இதற்கு முக்கிய காரணம். இதனால் விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும், மார்ச் மாதம் நடைபெறும் NDA-வின் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!