News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 16, 2026
ஆணுறுப்பை விற்பனை செய்த இளைஞர்.. எதற்கு தெரியுமா?

தலைப்பை பார்த்ததும் விசித்திரமாக தோன்றுகிறதல்லவா? தாய்லாந்தில்தான் இப்படியொரு சம்பவம் நடந்ததாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. தனது விலை உயர்ந்த காரில் மாற்றம் செய்வதற்காக, இளைஞர் ஒருவர் தனது விதைப்பையை (ஆணுறுப்பின் கீழ் பகுதி) ₹24.5 கோடி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. என்ன இருந்தாலும், இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்!
News February 16, 2026
BREAKING: தேர்தல்.. அறிவித்தார் பிரேமலதா

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற்றவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் நடைபெறும் என பிரேமலதா அறிவித்துள்ளார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிப்.22 வரை நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை, தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால், <<19154188>>NDA-வில்<<>> அவர் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News February 16, 2026
SK நடிக்கும் புதிய படத்தின் பெயர் இதுதான்!

RKFI தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கான பெயர் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான போஸ்டரில், சிவா கையில் அரிவாள், நெற்றியில் பட்டை, முறுக்கு மீசை என கம்பீரமாக இருக்கிறார். ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரை செங்குத்தாக பார்த்தால், முதல் எழுத்து ஓம் என்பதை பிரதிபலிக்கிறது.


