News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 4, 2026
திமுகவுக்கு எதிரான முக்கிய டிஸ்கஷனில் EPS

அதிமுக தலைமை அலுவலகத்தில் EPS தலைமையிலான மா.செ. கூட்டம் தொடங்கியது. இதில், வேட்பாளர் தேர்வு, பிரசார உத்திகள், தேர்தல் வாக்குறுதிகள், தொகுதியில் உள்ள குறைகள் ஆகியவற்றை பற்றி டிஸ்கஸ் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக, தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் மா.செ.க்களை எச்சரிக்கவும், திமுகவுக்கு எதிரான களப்பணியை தீவிரப்படுத்தவும் EPS திட்டமிட்டுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
News February 4, 2026
புதுச்சேரியில் தங்கம் விலை குறைந்தது

சென்னையில் இன்று (பிப்.4) தங்கம் விலை சவரனுக்கு ₹5,040 உயர்ந்து ₹1,19,200-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் தங்கம் விலை இன்று சவரன் ₹1,17,720-க்கு விற்பனையாகிறது. தமிழகத்தை விட ₹1,480 குறைந்து விற்பனையாவதால், எல்லையை ஒட்டியுள்ள கடலூர், நாகை மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். தமிழகத்தை விட கிராமுக்கு ₹185 குறைவான நிலையில் ₹14,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News February 4, 2026
டெல்லியில் ரேஷன் அட்டைக்கு சிலிண்டர் Free

டெல்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹோலி, தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் சிலிண்டருக்கான தொகை ₹853 இனி அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என CM ரேகா குப்தா தெரிவித்துள்ளார். TN-ல் தேர்தல் வருவதால் இதுபோன்ற அறிவிப்பு ஏதேனும் இடம்பெறுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


