News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News January 17, 2026

மாயமான விமானம்… 11 பேர் பலியா?

image

இந்தோனேசியாவின் ATR 42-500 ரக விமானம் இன்று மாயமாகியுள்ளது. மதியம் 1:17 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது எனவும், அதன் கடைசி சிக்னல் Makassar என்ற பகுதிக்கு வடகிழக்கே சுமார் 20 கிமீ தூரத்தில் பெறப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானம் விபத்துக்குள்ளானதை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் அதில் பயணித்த 14 பேரின் நிலைமை தற்போது கேள்வி குறியாகியுள்ளது.

News January 17, 2026

கூட்டணி முடிவு வெளியானது.. அதிரடி திருப்பம்

image

தமிழகத்தில் PM மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட பதாகையில் TTV போட்டோ இடம்பெற்றது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில், கூட்டணி பற்றி உரிய நேரத்தில் ‘உரியவர்கள்’ அறிவிப்பார் என்று TTV தினகரன் கூறியுள்ளார். இதனால் அவர் மீண்டும் NDA கூட்டணியிலேயே இணைவார் என்றும், அதனை PM மோடி அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News January 17, 2026

இனி வீடியோ மூலமே வங்கிக் கணக்கு திறக்கலாம்

image

இனி வங்கிக்கு நேரடியாகச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து வங்கிக் கணக்கை தொடங்க அவசியமில்லை. வீட்டிலிருந்தே வீடியோ KYC மூலம் வங்கிக் கணக்கை திறக்கலாம். ஆதார் கார்டு (அ) டிஜிலாக்கரில் உள்ள உங்களின் ஆவணங்களைக் கொண்டு வங்கி வெப்சைட் மூலம் இதனை செய்து முடிக்கலாம். வீடியோ KYC வசதி உங்கள் வங்கியின் நேரப்படி வழங்கப்படுகிறது. இதனை RBI அறிவித்துள்ளதால் எவ்வித அச்சமும் இன்றி செய்யலாம். SHARE IT.

error: Content is protected !!