News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 18, 2026
இந்தியா பிரான்ஸ் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மும்பை வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை PM மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தொடர்ந்து இந்தியாவின் டாடா நிறுவனமும், பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ள எச்125 ரக ஹெலிகாப்டரை காணொலி வாயிலாக இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர்.
News February 18, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை
▶குறள் எண்: 613
▶குறள்:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
▶பொருள்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
News February 18, 2026
கிரிக்கெட்டை மீட்டெடுக்க காதலியே காரணம்: ஹர்திக்

நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவை முறித்துக்கொண்ட ஹர்திக், இப்போது இந்திய மாடலான மஹிகா சர்மாவுடன் காதலில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதலியை அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். தன் கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் உற்சாகத்துடன் விளையாட முக்கிய காரணம் மஹிகா சர்மா தான் என கூறியுள்ளார். தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலியின் பெயரின் முதல் எழுத்தான M-ஐ ஹர்திக் பச்சை குத்தியுள்ளார்.


