News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 26, 2026
திருமணத்திற்கு முன் கர்ப்பமான பிரபல தமிழ் நடிகை

திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானது குறித்து நடிகை அமலா பால் பேசியது வைரலாகி வருகிறது. ஜெகத் தேசாயை டேட்டிங் செய்தபோது திருமணம் செய்யும் எண்ணத்திலேயே இல்லை எனவும், டேட்டிங் செய்த முதல் மாதத்திலேயே கர்ப்பமாகிவிட்டதால் திருமண முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெகத் தேசாய்க்கு முன்பாக, இயக்குநர் AL விஜய்யை மணந்த அமலா பால், 2017-ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
News February 26, 2026
விசிலுடன் ஸ்டேடியத்திற்கு வராதீங்க: TNCA

IND Vs ZIM சூப்பர் 8 சுற்று போட்டி இன்று இரவு 7 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், லீக் போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் சூப்பர் 8 சுற்றுக்கும் தொடர்வதாக TNCA தெரிவித்துள்ளது. விசில், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட 18 பொருள்களை எடுத்துவர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் மீறும் பட்சத்தில், பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News February 26, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. புதிய அறிவிப்பு வெளியானது

தேர்தலையொட்டி, சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் நாடார் பாதுகாப்பு பேரவை இணைந்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள், சென்னையில் இன்று EPS-ஐ சந்தித்தனர். தொடர்ந்து, வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற பாடுபடுவோம் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.


