News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 15, 2026
அமித் ஷா கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசிக் கொண்டிருந்த போது திடீரென ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தினர். பின்னர், ட்ரோனை பறக்கவிட்டது திருநள்ளாறைச் சேர்ந்த லோகேஷ் என்பதும், பொதுக்கூட்டத்தை யூ டியூப்பில் பதிவேற்ற படம்பிடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
News February 15, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 15, மாசி 3 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News February 15, 2026
பெண்களை லட்சாதிபதியாக்கும் தேர்தல் அறிக்கை ரெடி: பாஜக

தேர்தல் நெருங்க நெருங்க EPS கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். மறுபக்கம் CM ஸ்டாலின் மகளிருக்கு ₹5,000 ஒரே பேமெண்டில் கொடுத்ததோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 உயரும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்நிலையில், பெண்களை லட்சாதிபதியாக்கும் வகையில் எங்களது தேர்தல் அறிக்கை இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


