News September 28, 2024

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

image

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Similar News

News February 6, 2026

விஜயகாந்த் மரணம் குறித்து அவதூறு… டிஜிபியிடம் புகார்

image

விஜயகாந்த் மரணம் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்டதாக யூடியூபர்கள் சிலர் மீது தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி சூர்யா, தமிழா தமிழா பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேமுதிகவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்தில் பிரேமலதா குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

News February 6, 2026

மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

image

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல் நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 6, 2026

வங்கி கடன் தள்ளுபடி.. சந்தோஷமான செய்தி வந்தாச்சு

image

தேர்தலையொட்டி, கூட்டுறவு <<19007011>>வங்கி கடன் தள்ளுபடி<<>> தொடர்பான வாக்குறுதிகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. இதனால், கூட்டுறவு வங்கிகளில் மக்கள் ஆர்வமுடன் கடன் பெற்று வருகின்றனர். 2025 டிசம்பர் வரை, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட கடன் தொகை ₹85,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட குடும்ப செலவுகளுக்காக குறைந்த வட்டியில் ₹10 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.

error: Content is protected !!