News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 10, 2026
இந்த நேரத்தில் செல்போன் யூஸ் பண்ணாதீங்க!

நார்மலாகவே போன் அதிகமாக ஹீட்டாகும். அது, சம்மரில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். ஏன், போன் வெடிக்கும் அபாயமும் கூட ஏற்படலாம். அப்படி போன் அதிக ஹீட்டானால், நமக்கு ஒரு எச்சரிக்கை மெசெஜ் வரும். அது மாதிரியான நேரத்தில், என்ன வேலையாக இருந்தாலும், கொஞ்சம் நேரம் போனை யூஸ் பண்ணாதீங்க. போனை கொஞ்சம் நேரம் நிழலான இடத்தில் வைத்துவிட்டு, பிறகு யூஸ் பண்ணுங்க. SHARE IT.
News February 10, 2026
நெகடிவ்வாக இருப்பவர்களுக்கே வெற்றி கிடைக்குது: சரத்குமார்

நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகனாக இருக்க முடியாது என சரத்குமார் பேசியுள்ளார். ஆழி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நெகடிவ்வாக இருப்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள் என கூறியுள்ளார். மேலும், வில்லன் ஹீரோவாகவும், ஹீரோ வில்லனாகவும் இப்போது மாறிவிட்டனர் எனவும், நான் கலை உலகைத்தான் சொல்கிறேன், வேறு எதையும் புரிந்து கொள்ளாதீர்கள் என்றும் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
News February 10, 2026
ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 119 MP-க்கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸை அளித்தனர். ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது, பெண் MP-க்கள் மீது ஓம் பிர்லா வைத்த புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் சபாநாயகர் மீது வைத்துள்ளனர்.


