News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 7, 2026
TN-க்கும் கார்ல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம்? தமிழிசை

சென்னை கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். என்றைக்காவது தமிழ்நாட்டிற்கு கார்ல் மார்க்ஸ் வந்திருக்காரா? என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கு கார்ல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம், எதற்காக மார்க்ஸுக்கு தமிழ்நாட்டில் சிலை எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.
News February 7, 2026
சிலிகான் மூடிகள் பாதுகாப்பானதா?

சிலிகான் மூடிகள் பயன்படுத்த மற்றும் சுத்தம் செய்ய மிகவும் எளிதாக உள்ளதால், நவீன சமையலறைகளில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. இந்நிலையில் அவை பாதுகாப்பானதா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. சான்றளிக்கப்பட்ட உணவு தர சிலிகானிலிருந்து தயாரிக்கப்பட்ட மூடிகள் பாதுகாப்பானவை. இருப்பினும், அவை சாதாரண சமையலறை வெப்பநிலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அவை பிளாஸ்டிக் போன்று ஆபத்தை ஏற்படுத்தலாம்.
News February 7, 2026
விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வெற்றி: PM

உலகக்கோப்பையை வென்றுள்ள U 19 அணி குறித்து பெருமை கொள்வதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள அவர், இந்த வெற்றி பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் CM ஸ்டாலின், EPS உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


