News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News February 25, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 25, 2026
விஜய் இன்னும் கொள்கையை சொல்லவில்லை: சரத்குமார்

விஜய் தன்னுடைய கொள்கை கோட்பாடு எதனையும் இதுவரை சொல்லவில்லை என சரத்குமார் விமர்சித்துள்ளார். உரக்கப் பேசி, ஏதோ கருத்துக்களை கூறுவதாக விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார் எனவும் சாடியுள்ளார். தனிமனிதரைப் பற்றி பேசி, விமர்சனம் செய்வதுதான் அரசியல் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி அந்தக் கட்சி வளரும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 25, 2026
திமுகவினர் அடித்து ஆட வேண்டும்: செந்தில் பாலாஜி

திமுக அரசின் சாதனை திட்டங்களை வீடுதோறும் கொண்டு சென்று கோவையின் பத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என செந்தில்பாலாஜி பேசியுள்ளார். டெல்லியில் இருந்து வந்தாலும், குஜராத்தில் இருந்து வந்தாலும், சேலத்தில் இருந்து வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும், திமுகவினர் தடுப்பு ஆட்டம் ஆடாமல், அடித்து ஆட வேண்டும்; முதல் அடி நமது அடியாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


