News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News November 2, 2025
பாஜக தேர்தல் பணிகளை பார்க்க வந்த தூதர்கள்

பாஜகவின் தேர்தல் செயல்பாடுகள், பிரசாரங்களை பார்க்க டென்மார்க், ஆஸ்திரேலியா, பூடான், தென்னாப்பிரிக்கா, UK, ஜப்பான், இந்தோனேசியா நாட்டு தூதர்கள் பிஹாருக்கு இன்று முதல் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பது, முக்கிய தொகுதிகளுக்கு பயணிப்பது உள்ளிட்ட பணிகளை தூதர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதற்கு முன்பு குஜராத், இமாச்சல் தேர்தல்கள் நடந்த போதும் அவர்கள் பயணித்துள்ளனர்.
News November 2, 2025
நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

தங்கத்தை போன்று வெள்ளியை அடகு வைத்தும் கடன் பெறும் வசதி 2026 ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, கடனை திருப்பி செலுத்திய பிறகு அடகு வைத்த பொருள்களை உடனடியாக வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளைக்கும் ₹5,000 அபராதம் செலுத்தி வாடிக்கையாளரிடம் நகையை ஒப்படைக்க வேண்டும் என வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
பிரபல நடிகர் பங்கஜ் திரிபாதி தாயார் காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் தாயார் ஹேம்வந்தி தேவி (89) காலமானார். உடல்நலக் குறைவால் அவர் காலமானதாகவும், நேற்று அவரது இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததாகவும் பங்கஜ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முக்கிய நடிகராக விளங்கும் பங்கஜ் தமிழில் காலா படத்தில் போலீஸ் SI கதாபாத்திரத்தில் நடித்தவர். இவரின் மிர்ஸாபூர் சீரிஸும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.


