News September 28, 2024
ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து ரூ.67 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெப்படை அருகே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கேரள-தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணி பார்த்த போது ரூ.67 லட்சம் இருந்தது தெரியவந்தது.
Similar News
News January 19, 2026
விரைவில் தவெக தேர்தல் அறிக்கை

அதிமுக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை குழு TN முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தவெகவும் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதை முன்னிட்டு நாளை பனையூரில் தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இலவசங்கள் இல்லாத மக்கள் குறைகளை தீர்க்கும் வழிகள், வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
News January 19, 2026
உங்கள் செல்போனில் உடனே இதை பாருங்க

➤Settings-ல் About device ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤version என்ற ஆப்ஷன் வரும், அதற்குள் சென்றால் Version Number இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால் developer option enable ஆகும் ➤மீண்டும் Settings-க்கு சென்று Additional Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤Developer option-ஐ க்ளிக் பண்ணி APPS ஆப்ஷனுக்குள் செல்லவும் ➤Dont Keep activities என்ற செட்டிங்கை ON பண்ணா Bg-ல் செயலிகள் இயங்காது. போனும் Hang ஆகாது. SHARE.
News January 19, 2026
EPS-ஐ சந்தித்தார் தனியரசு.. திமுக கூட்டணிக்கு முடிவா?

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, EPS-ஐ சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள EPS-ன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. திமுக கூட்டணியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், அதனால் அங்கிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைய தனியரசு இசைவு தெரிவித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.


