News March 22, 2025
ரூ.58 கோடி… பரிசுத் தொகையை பங்கு போடுவது எப்படி?

சாம்பியன் டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு வீரருக்கும், தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கும் தலா ரூ.3 கோடி வழங்கப்பட உள்ளது. பிற பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிசிசிஐ அதிகாரிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2025
தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் பந்த்

கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும், மேகதாது அணை கட்ட விடாமல் தடுக்கும் தமிழக அரசுக்கு கண்டனம், சாம்பாஜி சிலையை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகா – தமிழக எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தமிழக எல்லையான ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
News March 22, 2025
வங்கி ஸ்டிரைக் ஒத்திவைப்பு

வரும் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால், திங்கள்கிழமை வழக்கம்போல் வங்கிகள் செயல்படும்.
News March 22, 2025
திமுக கூட்டணியில் இருந்து விலகல்.. முடிவு செய்யலாம்

சட்டப்பேரவையில் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துக் கொள்ளும் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னை கசந்து கொண்டே திமுக கூட்டணியில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று வேல்முருகன் பேசியிருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து அவரே முடிவு செய்யலாம் என வெளிப்படையாக சேகர் பாபு தெரிவித்துள்ளார்.