News March 9, 2025

ரூ.5000 கோடி சூதாட்டம்..! தாவூத் கும்பலுக்கு தொடர்பு

image

இந்தியா – நியூசிலாந்து இறுதிப் போட்டியை வைத்து ரூ.5000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்டத்தில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ‘D கம்பெனி’ ஈடுபட்டு உள்ளது. சூதாட்டம் தொடர்பாக டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Similar News

News July 11, 2025

மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு விஜய் புகழாரம்

image

மாவீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரனின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News July 11, 2025

NDA கூட்டணியில் உள்ளோம்: ஜான் பாண்டியன்

image

அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இருக்கிறோம் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், கூட்டணியில் தொடர்வது குறித்து தேர்தல் நேரத்தில்தான் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக கூட்டணிக்கு தங்களை அழைக்கவில்லை என்றும் அழைத்தால் அதுகுறித்து பரிசீலித்து முடிவெடுப்போம் எனவும் ஜான் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

News July 11, 2025

2027 ஆகஸ்டில் ஓய்வு.. ஜெகதீப் தன்கர் அறிவிப்பு

image

2027 ஆகஸ்டில் ஓய்வு பெற இருப்பதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை நிகழ்ச்சியில் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார். முன்னதாக, துணை ஜனாதிபதியாகும் முன்பு மே.வங்க ஆளுநராக தன்கர் பதவி வகித்தார். பின்னர் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக கூட்டணியால் முன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

error: Content is protected !!