News March 20, 2024
தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் ரூ.500 அபராதம்

கடும் பசி இருக்கும் நேரங்களில் பலர் தெரியாத திருமண வீடுகளில் சாப்பிடுவது உண்டு. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சத்தமில்லாமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி செல்லும்போது பிடிபட்டால் சிலர் கண்டித்து அனுப்புவார்கள். ஆனால், இப்படி நடந்துகொள்பவர்கள் மீது புகார் பதிவானால் IPC பிரிவு 441 ‘கிரிமினல் அத்துமீறல்’ சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் சிறை/ ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Similar News
News November 27, 2025
BREAKING: புயல் உருவானது.. பேய் மழை வெளுக்கும்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிட்வா புயலாக வலுப்பெற்றிருப்பதாக IMD அறிவித்துள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே திசையில் சுமார் 700 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிட்வா புயல் வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திற்கு 2 நாள்கள் <<18402600>>ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
பொங்கல் பரிசாக ₹5,000?… ரேஷன் கார்டுக்கு வழங்க திட்டம்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு தலா ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டவை வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பரிசுத் தொகை இல்லாமல், பொங்கல் பொருள்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
நவ.29-ல் திமுக MP-க்கள் கூட்டம்

திமுக MP-க்கள் கூட்டம் நவ.29-ம் தேதி நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து திமுக MP-க்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்திற்கான நிதி, மெட்ரோ ரயில் திட்டம், காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


