News December 4, 2024
கிழிந்த பையில் ரூ.3 லட்சம்.. லட்சாதிபதி பிச்சைக்கார பாட்டி!

லலிதா என்கிற மூதாட்டி பீகார் ஜனக்பூர் ராமர் கோயில் வாசலில் சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் அருகிலிருப்பவரிடம் தன் பையை கொடுத்துள்ளார். அவர் குப்பை தொட்டியில் போட போனபோது அங்கிருந்தவர்கள் கவனிக்கவே பையில் பணம் இருப்பது தெரிந்துள்ளது. கிழிந்த பையில் மொத்தமாக ரூ.3 லட்சம் இருந்தது. இந்த பணம் மூதாட்டியின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என சக துறவிகள் கூறினர்.
Similar News
News November 11, 2025
காந்தா படத்துக்கு சிக்கல்

நடிகர் MKT பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் காந்தா. இந்த படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இப்படத்தை எடுப்பதற்கு முன் வாரிசுகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என பாகவதரின் மகள்வழி பேரன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
News November 11, 2025
Delhi Blast: சகோதரியிடம் 3 நாள் முன்பு பேசிய உமர்

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் டாக்டர் உமர் முகமதுவின் பெயர் இருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம் என்று அவரது சகோதரி முசாமிலா கூறியுள்ளார். ஃபரீதாபாத்தில் வசித்து வந்த உமருடன் 3 நாள்களுக்கு முன் பேசினேன். அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல; அவருக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என கூறிய முசாமிலா, அடிலை (மற்றொரு சந்தேக நபர்) எங்களுக்குத் தெரியாது; பெயரை மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
நவ.14 அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா!

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Ex PM ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


