News December 4, 2024
கிழிந்த பையில் ரூ.3 லட்சம்.. லட்சாதிபதி பிச்சைக்கார பாட்டி!

லலிதா என்கிற மூதாட்டி பீகார் ஜனக்பூர் ராமர் கோயில் வாசலில் சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் அருகிலிருப்பவரிடம் தன் பையை கொடுத்துள்ளார். அவர் குப்பை தொட்டியில் போட போனபோது அங்கிருந்தவர்கள் கவனிக்கவே பையில் பணம் இருப்பது தெரிந்துள்ளது. கிழிந்த பையில் மொத்தமாக ரூ.3 லட்சம் இருந்தது. இந்த பணம் மூதாட்டியின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என சக துறவிகள் கூறினர்.
Similar News
News September 18, 2025
கால் பதிக்க முடியாத இடங்கள்

உலகில் சில இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு, ரகசியம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அரசால் தடை செய்யப்பட்டுள்ள சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த கால் பதிக்க முடியாத இடம் ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
செங்கோட்டையன் விவகாரம்: பாஜக புதிய முடிவு

செங்கோட்டையன் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பாஜகவினருக்கு B.L.சந்தோஷ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி விவகாரம், உள்கட்சி பிரச்சனை போன்றவற்றை தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும் எனவும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். முன்னதாக, ஒன்றிணைப்பு விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கருத்தை சுட்டிக் காட்டி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 18, 2025
கல்யாணம் கனவாவே போயிடுமா சார்..

பொருளாதாரம், சமூக மாற்றங்கள், தொழில் இலக்கு உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது பலரும் சிங்கிளாக இருக்கவே விரும்புகின்றனராம். அதிகபட்சமாக, ஸ்வீடனில் 50% பேர் சிங்கிளாகவே வாழ்கின்றனராம். ‘அமைதியே பிரதானம்’ என்பதாலேயே சிங்கிளாக இருப்பதாக பலரும் கூறியுள்ளனர். இதற்கு அடுத்ததாக நார்வே, பின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவில் 25% பேர் (18 – 35 வயது) சிங்கிளாக உள்ளனராம். நீங்க எப்பிடி?