News February 24, 2025

வங்கிக் கணக்கில் ரூ.2000.. உடனே செக் பண்ணுங்க

image

மத்திய அரசின் PM-KISAN திட்டத்தின் 19வது தவணையான ரூ.2000 இன்னும் சற்று நேரத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. பீகாரின் பாகல்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் PM மோடி 19ஆவது தவணைக்கான பணத்தை விடுவிக்க உள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில், வங்கிக் கணக்கில் KYC கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். உங்கள் கணக்கை உடனே செக் பண்ணுங்க..

Similar News

News February 24, 2025

போர் விமானங்கள் கிடைப்பதில் தாமதம்: அரசு எடுத்த ஆக்‌ஷன்

image

இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை செயலாளர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு, ஒரு மாதத்திற்குள் ஆய்வறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான HALயிடம், 2021ல் ஆர்டர் செய்த 83 போர் விமானங்கள் இன்னும் கிடைக்கவில்லை என விமானப்படை தளபதி AP சிங் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

News February 24, 2025

கோலியை புகழ்ந்து தள்ளிய PAK கேப்டன்

image

உலகமே கோலி ஃபார்மில் இல்லை எனக் கூறும்போது தான், அவர் சதம் அடித்துள்ளதாக PAK கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். கோலியின் கடின உழைப்பும், ஃபிட்னஸும் கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று எனவும், அவரை அவுட்டாக்க கடினமாக முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பியதே தங்களின் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

News February 24, 2025

பரிசு தருவதாக கூறி 10ஆம் வகுப்பு மாணவி வன்கொடுமை

image

கரூர் கிருஷ்ணாபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பரிசு தருவதாக அழைத்து, 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. பெற்றோரிடம் தெரிவிப்பதாக கூறியதால் மாணவியின் கழுத்தை மாணவர்கள் அறுத்த கொடூரமும் நடந்துள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் உள்ள சிறுமி அளித்த தகவலின்படி ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!