News May 2, 2024
ஏப்ரலில் யுபிஐ மூலம் ரூ.19.6 லட்சம் கோடி பரிமாற்றம்

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ரூ.19.6 லட்சம் கோடி பரிமாற்றம் செய்துள்ளனர். பணத்தைக் கையில் எடுத்துச் செல்ல விரும்பாதோர் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். இதுபோல ஏப்ரலில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.65,933 கோடி மதிப்பிலான 44.3 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
Similar News
News November 16, 2025
தவெக + காங்., கூட்டணியா? செல்வப்பெருந்தகை பதில்

தவெக உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக எழுந்த பேச்சுகளுக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். ராகுல் காந்தியும், விஜய்யும் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாகவும், கூட்டணி குறித்து ஆலோசிப்பதாகவும் வரும் தகவல்கள் பொய் என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இவையெல்லாம், தனிப்பட்ட லாப நோக்கத்திற்காக சிலர் கிளப்பிவிடும் தகவல்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
மன அழுத்தத்தை குறைக்கும் 6 உணவுகள்!

ஒருவரின் உணவு பழக்கம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வடிவமைக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும்போது உடல் மட்டுமல்ல, மனதுக்கும் அது நன்மையை தருவதாக கூறுகின்றனர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள். சில எளியமையான, அன்றாட உணவுகள் மன அழுத்தத்தை சரி செய்யவும், சமநிலையை பராமரிக்கவும் உதவுவதாக அவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 16, 2025
மீண்டும் பிஹார் CM ஆகிறாரா நிதிஷ்?

நிதிஷ்குமாரையே பிஹார் CM நாற்காலியில் அமரவைக்க NDA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும், இதில் PM மோடி மற்றும் பாஜக CM-கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதிஷ் குமார் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை நடக்கவிருப்பதாகவும் பேசப்படுகிறது. மேலும், DCM-மாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.


