News February 15, 2025
வங்கிக் கணக்கில் ரூ.15,000… இன்றே கடைசி

முதன் முதலாக வேலைக்கு சேருபவர்களுக்காக ELI (Employee Linked Incentive Scheme) திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் பயன்பெற, PF கணக்கின் UAN-ஐ ஆக்டிவேட் செய்து, வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கு இன்றே(பிப்.15) கடைசி நாளாகும். இதை செய்தால் தான், ஒரு மாதச் சம்பளம் (Max ரூ.15,000) 3 தவணைகளில் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தவறவிட்டவர்கள் உடனே செய்யவும்.
Similar News
News December 6, 2025
ரயிலில் இதை செய்தால் 5 ஆண்டுகள் சிறை.. Must Read

ரயிலில் பயணிக்கும் போது வாட்டர் கெட்டிலை பயன்படுத்தக்கூடாது என RPF எச்சரித்துள்ளது. ஏனென்றால், குறைந்த மின்னழுத்தம் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் இதுபோன்ற மின் சாதனங்களை பயன்படுத்தினார் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்படலாம். இந்நிலையில் ரயில்களில் கெட்டில் பயன்படுத்தினால் ₹1,000 அபராதம் (அ) 5 ஆண்டுகள் சிறை தண்டனை (அ) இரண்டுமே விதிக்கப்படும் என RPF தெரிவித்துள்ளது.
News December 6, 2025
தவெகவில் இணைந்தவுடன்.. விஜய் போட்ட உத்தரவு

நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்தை, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, நாஞ்சில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த தவெக மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் தவெக கொள்கை, விஜய் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னென்ன செய்வார், திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து அவர் பேசவிருக்கிறாராம்.
News December 6, 2025
இண்டிகோ மீது நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர்

இண்டிகோ பிரச்னை விரைவில் சீராகும் என விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் தெரிவித்துள்ளார். விமான பணி நேர வரம்பு விதிகளால்தான் இந்த இன்னல்கள் நேர்ந்ததாக கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மற்ற விமான நிறுவனங்கள் சரியாகத்தானே இயங்குகிறது என கூறியுள்ளார். மேலும் இதற்கு இண்டிகோ தான் காரணம் என்ற அவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.


