News February 15, 2025

வங்கிக் கணக்கில் ரூ.15,000… இன்றே கடைசி

image

முதன் முதலாக வேலைக்கு சேருபவர்களுக்காக ELI (Employee Linked Incentive Scheme) திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் பயன்பெற, PF கணக்கின் UAN-ஐ ஆக்டிவேட் செய்து, வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கு இன்றே(பிப்.15) கடைசி நாளாகும். இதை செய்தால் தான், ஒரு மாதச் சம்பளம் (Max ரூ.15,000) 3 தவணைகளில் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தவறவிட்டவர்கள் உடனே செய்யவும்.

Similar News

News December 3, 2025

ஏக்கருக்கு ₹40,000 இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

image

தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹8,000 வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சம்பா, தாளடி பயிர்களுக்கு விவசாயிகள் இதுவரை ஏக்கருக்கு ₹30,000 வரை செலவு செய்திருக்கும் நிலையில், அரசின் நிவாரணம் போதாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 3, 2025

பேய் மழை வெளுக்கும்.. 25 மாவட்டங்களில் அலர்ட்

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தி.மலை, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2025

தி.மலையில் தீபம் ஏற்ற உரிமை இவர்களுக்கு மட்டுமே உரிமை!

image

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றும் உரிமை ஒரு வம்சத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மலை உச்சியில் தீபம் ஏற்ற பர்வத ராஜகுலத்தினருக்கு (மீனவர்) உள்ள உரிமையாகும். இது, பண்டைய காலத்தில் சிவன் படையினராக இருந்த செம்படவர் சமூகத்தின் வழித்தோன்றல்களாக இவர்களை கருதுவதனால் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!