News January 24, 2025
மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000… இன்றே கடைசி

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குகிறது. இதற்காக 8ஆவது பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழித் தேர்வு நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு அந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இந்தாண்டு தேசிய வருவாய் வழித் தேர்வு பிப். 22இல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்றைக்குள் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News October 22, 2025
கேரளாவின் முயற்சியை தமிழகம் முறியடிக்கணும்: TTV

முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று கேரள அரசு பிடிவாதம் பிடிப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவின் சில அமைப்புகளும் இதே மனப்பான்மையில் வதந்திகளை பரப்பி வருவதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க, தமிழக அரசு சட்ட ரீதியாக முயற்சிகளை மேற்கொண்டு, கேரள அரசின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News October 22, 2025
டெல்லியை கலங்கடித்த காற்று மாசு!

தலைநகரில் காற்று மாசு வழக்கமான ஒன்று. ஆனால், தீபாவளியன்று உச்சம் தொட்ட காற்று மாசு, கண்காணிப்பு நிலையங்களையே செயலிழக்க வைத்துள்ளது. 39 நிலையங்களில் வெறும் 9 மட்டுமே தரவுகளை பதிவு செய்துள்ளன, மற்றவை செயலிழந்துள்ளன. மாசு அளவு அதிக அளவை தாண்டும்போது (இந்திய வரம்பு= 60 µg/m³/பதிவானது 1,000 µg/m³), துல்லியமான தரவை பதிவு செய்ய முடியாத தொழில்நுட்ப வரம்பே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
News October 22, 2025
சாராயம் விற்பதில் சாதிப்பது தான் திராவிட மாடலா?: PMK

தமிழகத்தில் 3 நாட்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்று அன்புமணி சாடியுள்ளார். தீபாவளியை ஒட்டி 3 நாட்களில் ₹790 கோடி மதுவிற்பனை நடைபெற்றிருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொண்டாட்டங்கள் என்றாலே மது அருந்துவது தான் என்ற நிலைக்கு மக்களை அரசு தள்ளியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அன்புமணி, சாராயத்தில் சாதிப்பது தான் திராவிட மாடலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.