News December 28, 2024
வங்கிக் கணக்கில் ரூ.1,000.. இன்னும் 2 நாள்களில் டெபாசிட்

அரசு பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதே திட்டம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கும் நாளை மறுநாள் (30ஆம் தேதி) விரிவுப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதும், அந்த மாணவிகளின் வங்கிக்கணக்கில் அரசால் மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது.
Similar News
News August 15, 2025
தமிழகத்தின் குரல்: முதல்வர்களுக்கு கிட்டிய உரிமை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட PM சுதந்திர தினத்தில் கொடியேற்றும்போது, அதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM ஏன் கொடியேற்றக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார் அன்றைய CM கருணாநிதி. தொடர்ந்து, அப்போதைய PM இந்திரா காந்திக்கு பலமுறை கடிதங்கள், நேரில் வலியுறுத்தல், சட்டப்பேரவையில் தீர்மானம் என அழுத்தம் கொடுத்தார். பின்பு, 1974-ல் முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமையை இந்திரா காந்தி வழங்கினார்.
News August 15, 2025
தலைமை மீது அப்செட்டில் MP தங்க தமிழ்செல்வன்!

திமுக தலைமை மீது MP தங்க தமிழ்செல்வன் அதிருப்தியில் இருக்கிறார். <<17279741>>அரசு விழா மேடையில் தன்னை அவமதித்த<<>> ஆண்டிபட்டி MLA மகாராஜனுக்கு எதிராக அவர் தலைமையிடம் முறையிட்டுள்ளார். ஆனால், MLA மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மா.செ.,வாக இருந்தும் தனக்கு மதிப்பில்லை என நிர்வாகிகள் சிலரிடம் புலம்பியுள்ளாராம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மோதல் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News August 15, 2025
ஏன் ரோஹித் வெற்றிகரமான கேப்டன்?

கிரிக்கெட்டில் ரோஹித்தின் கேப்டன்சிக்கு தனித்தன்மை உண்டு. இந்நிலையில், ஏன் ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார் என்று புவனேஷ்வர் குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ரோஹித் ஒரு முதிர்ச்சியான கேப்டன் என்றார். ஒவ்வொரு வீரர்களின் பலத்தையும் புரிந்துகொண்டு, அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவருக்கு நன்றாகத் தெரியும் எனக் குறிப்பிட்டார். ரோஹித் கேப்டன்சியில் மறக்க முடியாத மொமண்ட் எது?