News March 6, 2025

4.97 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000: அமைச்சர் பிடிஆர்

image

புதுமைப் பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி 4.97 லட்சம் மாணவிகள், 4.16 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார்.

Similar News

News March 6, 2025

லிவ் இன் உறவு… பாலியல் புகார் கூற முடியாது: சுப்ரீம் கோர்ட்

image

திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவில் வாழும் ஜோடிகளுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நீண்ட காலம் லிவ் இன் உறவில் இருந்த பெண், தனது இணையர் மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் இருந்து பிரிந்த கல்லூரி பேராசிரியர் தொடர்ந்த பாலியல் வழக்கில், இதனை கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.

News March 6, 2025

ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் ED சோதனை

image

சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் என்ற நிறுவனத்திலும் சோதனை நடந்து வருகிறது. SNJ என்ற மதுபான நிறுவனம், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் காலை முதல் ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் 3 நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.

News March 6, 2025

திருப்பதியில் இனி மசால் வடை

image

திருப்பதி என்றாலே லட்டுதான். ஆனால், இனி மசால் வடையும் கிடைக்குமாம். அட ஆமாங்க, தினசரி நடக்கும் அன்னதானத்தில் தான் மசால் வடை பரிமாறப்படுகிறது. சோதனை முயற்சியாக இந்தத் திட்டத்தை தேவஸ்தான அறங்காவலர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் சாப்பிட அமர்ந்திருந்த பக்தர்களின் இலைகளில் மசால் வடையும் பரிமாறப்பட, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கம் எழுப்பி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

error: Content is protected !!