News November 23, 2024

ரூ.1,000 கல்வி உதவித் தொகை தேர்வுக்கான அவகாசம் நீட்டிப்பு

image

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நவ.25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், விருப்பமுள்ள மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளது.

Similar News

News November 23, 2025

இந்த Browser-ல் விளம்பரங்களே வராது!

image

கூகுள் குரோமுக்கு போட்டியாக Perplexity நிறுவனம் Comet பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது, இதில் நீங்கள் பல Tab-களை Open செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தேடும் அனைத்தும் ஒரே Tab-ல் சம்மரியாக கொடுக்கும் ‘Cross-Tab Summaries’ வசதி இதில் உள்ளது. இதில் ‘Ad Blocker’ இருப்பதால் விளம்பரம் வராது. இந்த பிரவுசர் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும். SHARE.

News November 23, 2025

21 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதை

image

பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது தமிழ் தொண்டினை கௌரவிக்கும் விதமாக போலீஸ் மரியாதை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!