News March 13, 2025
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு: ED

TASMAC தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் மார்ச் 6ம் தேதி நடத்திய சோதனை தொடர்பாக ED விளக்கம் அளித்துள்ளது. அதில், சோதனையில் ரூ.1,000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ED, TASMAC உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
கடன் வாங்கியவர்கள் நெஞ்சில் பாலை வார்த்த FM நிர்மலா

கடனை திருப்பி வசூலிக்கும்போது கஸ்டமர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு FM நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் Non-Banking Financial Company கூட்டத்தில் பேசிய அவர், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வழங்கும் கடன்கள் 24% ஆக உள்ளதாகவும், இது 2047-க்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என்றார். இதனால் வரும் நாள்களில் பலருக்கும் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
News July 11, 2025
இறுதிக்கட்டத்தை நெருங்கும் USA உடனான வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார். இந்தியா – அமெரிக்காவுக்கான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவராக இவர் உள்ளார். மேலும் இந்தியா தரப்பில் இதுவரை 26 நாடுகளுடன் 14-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
News July 11, 2025
ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாமென அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை(ஈரான், அமெரிக்கா) வைத்துள்ளவர்கள் ஈரானுக்குள் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவர்களுடன் அமெரிக்க தூதரகம் மூலம் பேசுவதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.