News August 25, 2024
நெல்லை வாலிபரிடம் ரூ.10 லட்சம் நூதன மோசடி

பாளை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுரு (32) என்பவர் டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என மர்ம நபர் பேசிய வார்த்தையை நம்பி ரூ.10 லட்சத்தை மர்ம நபரின் கூகுள் பேவிற்கு செலுத்தியுள்ளார். ஆனால் அதற்கான கூடுதல் பணம் செல்வகுருவிற்கு வந்து சேரவில்லை. இதுகுறித்து நெல்லை சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 2, 2025
நெல்லையில் போலீசார் அதிரடி இடமாற்றம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் டிஎஸ்பி சதீஷ்குமார் தர்மபுரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் நெல்லை மாநகர நுண்ணறிவு போலீஸ் உதவி கமிஷனர் கதிர்லால் சிவில் சப்ளை சிஐடி பிரிவு மயிலாடுதுறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
News November 2, 2025
நெல்லை: இனி வெளிநாட்டில் வேலை பெறலாம்

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் www.nationalskillacademy.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். படிப்புகளை முடித்த பிறகு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறலாம்.
News November 2, 2025
நெல்லை: பெட்ரோல்குண்டு வீசிய மேலும் 2 பேர் கைது

கடந்த சில நாட்களுக்கு முன்பு தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட 6 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தருவையை சேர்ந்த பாலாஜி, உடையார்புரத்தை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


