News February 10, 2025
RRB Group D 2025: சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 17, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆக.16) இரவு முதல் இன்று (ஆக.17) காலை வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 16, 2025
கிருஷ்ணகிரி: EPFO நிறுவனத்தில் ரூ.45,000 சம்பளத்தில் வேலை

கிருஷ்ணகிரி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <
News August 16, 2025
விநாயகர் சதுர்த்தி விழா; ஆட்சியர் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய் அலுவலரக்கள், சார் ஆட்சியர், நேர்முக உதவியாளர் மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.