News October 22, 2024
SEBI தலைவருக்கு ரூட் கிளியர்..?

SEBI தலைவர் மாதபி புரி மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பதவிக்காலம் முடியும் வரை (2025 பிப்ரவரி) அவர் பொறுப்பில் தொடருவார் என்றும் கூறப்படுகிறது. அதானி நிறுவனங்களில் பங்கு, ICICI வங்கியிடம் ஊதியம் பெற்றது, ZEE குழும தலைவரிடம் லஞ்சம் கேட்டது என அவர் மீது அடுக்கடுக்காக புகார் அளிக்கப்பட்டது.
Similar News
News August 11, 2025
FLASH: நடிகை மீரா மிதுன் மனநல ஹாஸ்பிடலில் அனுமதி

மன அழுத்தம் காரணமாக நடிகை மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 2021-ல் பட்டியல் சமூக மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், கோர்ட்டில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் இந்த தகவலை கூறியுள்ளனர்.
News August 11, 2025
‘உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் இவர் தான்’

உலகின் தலைசிறந்த WK யார் என்றால் இப்போதைய ரசிகர்கள் தோனி என்பார்கள். ஆனால், சையது கிர்மானி தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்று Ex கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார். கிர்மானியின் சுயசரிதை நூலான ‘Stumped: Life Behind and Beyond The Twenty-Two Yards’ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், 4 ஸ்பின்னர்கள் பந்துவீச கீப்பிங் செய்தவர், உலகக் கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தவர் எனப் புகழ்ந்தார்.
News August 11, 2025
பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? EPS புதிய விளக்கம்

நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், ஸ்டாலினுக்கு ஏன் பயம் வருகிறது என EPS கேள்வி எழுப்பியுள்ளார். தளியில் பேசிய அவர், TN மக்களுக்கு தீங்கு செய்யும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே ஒத்த கருத்துடைய இரு கட்சிகள்(ADMK – BJP) கூட்டணி அமைத்துள்ளது என்றார். மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை எளிமையாக நிறைவேற்ற முடியும் எனவும் கூறினார்.