News August 27, 2024
ஓய்வு குறித்து அறிவித்த ரொனால்டோ!

உலக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (38) தனது ஓய்வை பற்றி முதல்முறையாக பேசியுள்ளார். கிளப் கால்பந்தில் கிட்டத்தட்ட அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள ரொனால்டோ, இன்னும் தனது போர்ச்சுகல் அணிக்காக உலகக் கோப்பையை வெல்லவில்லை. இந்நிலையில், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவேன் எனக் கூறிய அவர், ஓய்வுக்கு பிறகு ஒரு கிளப்பை வாங்க விரும்புவதாக தெரிவித்தார்.
Similar News
News July 6, 2025
இரு சமுதாயங்கள் சேர்ந்தால் ஆளலாம்: அன்புமணி

வன்னியர் & பட்டியலின சமுதாயம் சேர்ந்தால் தமிழகத்தை நாம் ஆளலாம் என அன்புமணி தெரிவித்துள்ளார். மறைந்த BSP Ex தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தலில் பேசிய அவர், சமீபத்தில் தனக்கு கிடைத்த தரவுகளின்படி 62 MLA தொகுதிகளில் அதிகம் இருப்பது வன்னியர் சமுதாயம். 42 தொகுதிகளில் இருப்பது பட்டியிலின சமுதாயம் என்றும் குறிப்பிட்டார். அம்பேத்கர், பெரியார் வழியில் தங்களை ராமதாஸ் வழிநடத்தியாகவும் அவர் கூறியுள்ளார்.
News July 6, 2025
நடிகை கைலி பேஜ் மரணம்.. போதை மருந்து காரணமா?

ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த இளம் நடிகை கைலி பேஜ்(28) கடந்த 3-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்தார். 2016 முதல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட இவருக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். இந்நிலையில், TMZ சினிமா வலைத்தள தகவலின்படி அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்ததே உயிர்போக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. Say no to drugs
News July 6, 2025
ஆட்டம் ஆரம்பித்ததும் அதகளம் காட்டிய ஆகாஷ்

இங்கி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம், மழை காரணமாக 80 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆகாஷ் தீப் பந்தில் ஓல்லி போப் (24 ரன்கள்) & ஹாரி புரூக் (23 ரன்கள்) ஆகியோர் பெவிலியன் திரும்பினர். இதுவரை 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கி., அணி, இந்தியாவின் அசத்தலான பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இதில் 4 விக்கெட்டுகளை ஆகாஷே எடுத்துள்ளார்.