News April 16, 2025

வான்கடே மைதானத்தில் ஜொலிக்கும் ரோகித் பெயர்

image

ரோகித் சர்மாவை கவுரவிக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆம்! வான்கடே மைதானத்தில் ஒரு கேலரி-க்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை வைக்க, மும்பை கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் முன்னாள் BCCI தலைவர் சரத் பவார் மற்றும் பேட்டிங் ஜாம்பவான் அஜித் வடேகர் ஆகியோரின் நினைவாக மேலும் இரண்டு கேலரிகளுக்கு பெயரிடப்படும் என்றும் MCA உறுதிப்படுத்தியுள்ளது.

Similar News

News April 16, 2025

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் ஜாகீர் கான்..!

image

இந்திய அணியின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் – ஹிந்தி நடிகை சாகரிகா காட்கே தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் இருவரும் பதிவிட்டுள்ளனர். அதில், ‘அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன் எங்கள் ஆண் குழந்தை ஃபதேசின் கானை வரவேற்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். நட்சத்திர தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News April 16, 2025

ஆபாச படத்தால் துன்பம்.. அமலாபால் கண்ணீர்

image

ஆபாச படத்தால் தாம் மிகவும் துன்பம் அனுபவித்ததாக நடிகை அமலாபால் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படம், மருமகள், மாமனார் இடையேயான திருமணத்தை மீறிய உறவு குறித்ததாகும். இந்தப் படத்தில் தாம் நடித்தற்காக தனது தந்தையும், குடும்பத்தினரும் மிகவும் வருத்தப்பட்டதாக அமலாபால் கூறியுள்ளார்.

News April 16, 2025

விவசாயிகள் அடையாள எண் – காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

image

விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் ஏப். 30 வரை அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த அளவிலான விவசாயிகளே அடையாள எண்ணை பெற்றுக் கொண்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த எண்ணை பெறாத விவசாயிகள் மத்திய அரசின் சலுகைகளை இழக்க நேரிடும். SHARE IT.

error: Content is protected !!