News March 18, 2025
ரோஹித் பொறுப்பேற்க வேண்டும்: கங்குலி

AUS, NZக்கு எதிராக தொடர் தோல்வி, WTC ஃபைனலுக்கு தகுதி பெறாதது என டெஸ்ட்டில் IND அணி சொதப்பி வருவதற்கு ரோஹித் பொறுப்பேற்க கங்குலி வலியுறுத்தியுள்ளார். இதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரோஹித் போன்ற ஒரு வீரரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 18, 2025
என் வாழ்க்கை மாறிவிட்டது: ஹர்திக் பாண்ட்யா

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, பின்னர் தூக்கியெறியப்பட்டவர் ஹர்திக் பாண்ட்யா. தற்போது ரசிகர்களின் அன்பை அவர் மீண்டும் பெற்றிருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், என்னை சுற்றி நடந்த தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கடினமாக உழைத்தேன். டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, எனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. எனக்கு எதிராக இருந்த ரசிகர்களின் அன்பு, எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது எனக் கூறினார்.
News March 18, 2025
ஆண் குழந்தைதான் வேணும்… கொடூரத் தாயால் விபரீதம்!

ராஜஸ்தானில் ஆண் குழந்தை பெறாத விரக்தியில், பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆணோ, பெண்ணோ அனைவரும் சமம் என்பதை சமூகம் எப்போதுதான் உணருமோ?
News March 18, 2025
தெரு நாயை கொன்றால் என்ன தண்டனை தெரியுமா?

தெருவில் திரியும் நாய், பூனை, பசு போன்ற விலங்குகளுக்கும் நமது சட்டத்தில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வாகனங்களால் மோதி அவற்றை கொன்றாலோ, காயப்படுத்தினாலோ காவல்நிலையத்தில் புகார் தரலாம். அங்கு IPC சட்டத்தின் 428,429ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும். அந்த பிரிவில் வழக்குப்பதிவானால், ரூ.2,000 அபராதம் (அ) 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வழி ஏற்படும்.