News April 15, 2024
சிக்ஸரில் ரோஹித் சர்மா சாதனை

சென்னை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிவரும் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தபோது டி20 போட்டிகளில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 1,056 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். பொல்லார்ட்(860), ரசல்(678), கொலின் முன்ரோ(548) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Similar News
News December 31, 2025
கள்ளக்குறிச்சி மக்களுக்கான முக்கிய எண்கள்!

அவசர காலத்தில் கள்ளக்குறிச்சி மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள். 1). அரசு மருத்துவமனை உளுந்தூர்பேட்டை- (04149-222201). 2). அரசு மருத்துவமனை சங்கராபுரம்- (04151-254537). 3). அரசு மருத்துவமனை சின்னசேலம்- (04151-258374). 4). அரசு மருத்துவமனை திருக்கோவிலூர்- ( 04153-253055) அவசர காலத்தில் உங்கள் நண்பர்களுக்கு உதவும். மறக்காம ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
பொங்கல் கரும்பை நேரடியாக கொள்முதல் செய்க: அன்புமணி

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தோ, அதில் கரும்பு இடம்பெறுமா என்பது குறித்தோ இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை என அன்புமணி விமர்சித்துள்ளார். பன்னீர் கரும்பை கொள்முதல் செய்வதில் உள்ள குளறுபடிகளால், விவசாயிகளின் வலி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்வதோடு, தொகுப்பில் வழங்கும் கரும்புகளின் எண்ணிக்கையை 2-ஆக அதிகரிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 31, 2025
தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் தீர்ப்பை ஏற்காதது முட்டாள்தனம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி, சிவன், மீனாட்சி, திருக்குறளை எப்படி சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாதோ, தீபம் ஏற்றுவதையும் தடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் காட்டாமாக குறிப்பிட்டுள்ளார்.


