News April 24, 2025
பிளவுப்படுத்தும் அரசியலே காரணம்: ராபர்ட் வதேரா தாக்கு

பஹல்காம் தாக்குதலில் இந்துக்களை மட்டும் கொன்றது ஏன் என பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வினவியுள்ளார். நம் நாட்டில் தற்போது இந்துத்துவா பேசப்படுவதால், இந்து- முஸ்லிம் இடையே கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே இந்துக்கள் குறி வைக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆனால், தாக்குதலை கண்டிக்காமல் இந்தியா மீது காங். பழிபோடுவதாக பாஜக விமர்சித்துள்ளது.
Similar News
News December 4, 2025
இன்று மாலை 6:14 மணிக்கு இத மிஸ் பண்ணிடாதீங்க!

மனிதர்களை ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கும் வானில், இன்று மாலை 6:14 மணிக்கு அதிசயம் நிகழவுள்ளது. நிலா Full cold moon என்ற நிலையை அடைந்து, 14% பெரிதாகவும், பிரகாசமாகவும் ஒளிரவுள்ளது. நாளை அதிகாலை 4:44 மணிக்கு உச்சநிலையை அடையும் இந்த நிலவை வெறும் கண்ணிலேயே பார்க்கலாம். கடைசியாக 2023-ல் இந்த Full cold moon தோன்றிய நிலையில், அடுத்து 2028-ல் தான் வருமாம். எனவே இன்னைக்கு மிஸ் பண்ணிடாதீங்க!
News December 4, 2025
15 வயதில் PhD முடித்த ‘குட்டி ஐன்ஸ்டீன்’

15 வயதில் மாணவர்கள் பலருக்கு, 10-ம் வகுப்பு முடிப்பதே பெரும்பாடாக உள்ளது. ஆனால் பெல்ஜியத்தை சேர்ந்த லாரன்ட் சைமன்ஸ், 15 வயதில் குவாண்டம் இயற்பியலில் PhD முடித்து சாதனை படைத்துள்ளார். Black holes உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்த லாரன்ட், ‘சூப்பர் மனிதர்களை’ உருவாக்குவதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார். 12 வயதிலேயே டிகிரி முடித்த இந்த ‘குட்டி ஐன்ஸ்டீன்’, தற்போது 2-வது PHD படிப்பையும் தொடங்கியுள்ளார்.
News December 4, 2025
13 ஆண்டுகளுக்கு பிறகு..

சையது முஷ்டாக் அலி தொடரின், Knock- Out சுற்றில் விளையாட ரோஹித் விருப்பம் தெரிவித்துள்ளாராம். அவர் கடைசியாக 2011-12 சீசனில் மும்பை அணிக்காக இத்தொடரில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்துக் கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என ரோஹித் & கோலியிடம் BCCI அறிவுறுத்திய நிலையில், இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.


