News April 24, 2025
பிளவுப்படுத்தும் அரசியலே காரணம்: ராபர்ட் வதேரா தாக்கு

பஹல்காம் தாக்குதலில் இந்துக்களை மட்டும் கொன்றது ஏன் என பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வினவியுள்ளார். நம் நாட்டில் தற்போது இந்துத்துவா பேசப்படுவதால், இந்து- முஸ்லிம் இடையே கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே இந்துக்கள் குறி வைக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆனால், தாக்குதலை கண்டிக்காமல் இந்தியா மீது காங். பழிபோடுவதாக பாஜக விமர்சித்துள்ளது.
Similar News
News December 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 560 ▶குறள்: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ▶பொருள்: ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
News December 25, 2025
நக்சலைட் ஆவதே குறிக்கோளாக இருந்தது: ஆதவ்

கல்லூரி பருவத்தில் அரசியல்வாதிகளை பார்த்தால் துப்பாக்கி எடுத்துச் சுட வேண்டும் என்று ஒரு கோபம் இருக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதனால் காலேஜ் முடித்துவிட்டு நக்சலைட் ஆக வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோளாக இருந்ததாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால், அந்த எண்ணத்தில் இருந்து தன்னை மாற்றியது பேராசிரியர் அலெக்ஸாண்டர் தான் என தனது ஆசிரியரையும் நினைவுகூர்ந்துள்ளார்.
News December 25, 2025
பவுமாவிடம் மன்னிப்பு கேட்ட பும்ரா, பண்ட்

SA உடனான டெஸ்ட்டின்போது, கேப்டன் <<18291955>>பவுமாவை<<>> பும்ராவும், பண்ட்டும் கேலி செய்தது சர்ச்சையானது. ஆனால், ஆட்டநேர முடிவில் இருவரும் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக பவுமா தெரிவித்துள்ளார். களத்தில் கூறப்பட்டது, களத்தோடு விட்டுவிட வேண்டும், தனிப்பட்ட பகையாக எடுத்துக் கொள்ளk கூடாது எனவும், அதேபோல், இந்தியாவை மண்டியிட செய்வோம் என தங்கள் அணி பயிற்சியாளரும் பேசியிருக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


