News April 24, 2025

பிளவுப்படுத்தும் அரசியலே காரணம்: ராபர்ட் வதேரா தாக்கு

image

பஹல்காம் தாக்குதலில் இந்துக்களை மட்டும் கொன்றது ஏன் என பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வினவியுள்ளார். நம் நாட்டில் தற்போது இந்துத்துவா பேசப்படுவதால், இந்து- முஸ்லிம் இடையே கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே இந்துக்கள் குறி வைக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆனால், தாக்குதலை கண்டிக்காமல் இந்தியா மீது காங். பழிபோடுவதாக பாஜக விமர்சித்துள்ளது.

Similar News

News April 24, 2025

RCB VS RR: ஆதிக்கம் செலுத்தப் போவது யார்?

image

இந்த சீசனில் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியை கூட RCB அணி வெல்லவில்லை. இந்த சூழலில்தான் இன்று RR அணியை எதிர்கொள்கிறது. 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே RR வென்றுள்ளது. காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விளையாடாததால் ரியான் பராக் அணியை வழிநடத்தவுள்ளார். அதேநேரத்தில், சொந்த மண்ணில் தொடரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க RCB மல்லுக்கட்டும். இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?

News April 24, 2025

ஹய்யா ஜாலி.. இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப். 17 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மதியத்துடன் இறுதித் தேர்வு நிறைவடைகிறது. அதன்பின்னர், அவர்களுக்கும் விடுமுறைதான். கோடை விடுமுறை நிறைவடைந்து ஜுன் 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமே ஜாலிதான்!

News April 24, 2025

40 திருமணம் செய்வேன்.. வனிதா விஜயகுமார் காட்டம்

image

ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் என பரவிய செய்திக்கு நடிகை வனிதா விஜயகுமார் காட்டமாக பதிலளித்துள்ளார். ‘மிஸஸ் & மிஸ்டர்’ பட போஸ்டரை வைத்து இருவருக்கும் திருமணம் என செய்தி பரவியது. இதுகுறித்து பேசிய வனிதா, 40 திருமணம்கூட செய்வேன் என முதலில் கூறினார். பின்னர், ‘4 திருமணம்கூட செய்யவில்லை. என்னை அசிங்கப்படுத்த வேண்டாம். நான் திருமணம் செய்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை’ எனக் குறிப்பிட்டார்.

error: Content is protected !!