News April 24, 2025
பிளவுப்படுத்தும் அரசியலே காரணம்: ராபர்ட் வதேரா தாக்கு

பஹல்காம் தாக்குதலில் இந்துக்களை மட்டும் கொன்றது ஏன் என பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வினவியுள்ளார். நம் நாட்டில் தற்போது இந்துத்துவா பேசப்படுவதால், இந்து- முஸ்லிம் இடையே கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே இந்துக்கள் குறி வைக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆனால், தாக்குதலை கண்டிக்காமல் இந்தியா மீது காங். பழிபோடுவதாக பாஜக விமர்சித்துள்ளது.
Similar News
News November 8, 2025
பிரபல தமிழ் நடிகைக்கு 2வது கல்யாணம்

CSK அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை 2-வது திருமணம் செய்ய உள்ளதாக நடிகை சம்யுக்தா உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த், முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் ஆவார். அனிருதா ஸ்ரீகாந்த் – சம்யுக்தா இருவரும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
EPS முகத்திரை கிழிந்தது: ஆர்.எஸ்.பாரதி

பெண்கள் பாதுகாப்பு குறித்து EPS-ன் அற்பத்தனமான அரசியல் அம்பலமானது என்று ஆர்.எஸ்.பாரதி கட்டமாக விமர்சித்துள்ளார். கோவை விவகாரத்தில் தன்னை யாரும் கடத்தவில்லை என சம்பந்தப்பட்ட பெண்ணே வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால், எந்த வகையிலாவது திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் நாள்தோறும் விஷமப் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் EPS-ன் முகத்திரை கிழிந்துள்ளது எனவும் சாடியுள்ளார்.
News November 8, 2025
FLASH: 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக TN-ல் நவ. 8-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என ஏற்கெனவே IMD அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், வெளியே செல்வோர் மறக்காமல் குடையோடு செல்லுங்கள்.


