News March 13, 2025
14 கடைகளில் கொள்ளை: ஷாக்கான திருடர்கள்

மஹாராஷ்டிராவின் தானேவில் ஒரே இரவில் 14 கடைகளில் நடந்த கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதிர்ச்சியடைந்தது கடைகாரர்கள் அல்ல; கொள்ளையர்கள்தான். 14 கடைகளில் 8ல் மட்டுமே கல்லா பெட்டியில் பணம் இருந்துள்ளது. மற்ற கடைகளில் இல்லை. கிடைத்த பணமும் வெறும் ₹27,000 தான். காரணம் அனைத்துமே UPI பரிவர்த்தனை. இதனால் பெரிய இழப்பில் இருந்து தப்பியிருப்பதாக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் கடைகாரர்கள்.
Similar News
News July 10, 2025
1,996 ஆசிரியர் பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க

அரசுப் பள்ளிகளில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் 216, ஆங்கிலம் 197, கணிதம் 232, இயற்பியல் 233, வேதியியல் 217 பணியிடங்கள் உள்பட 1996 இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் இன்று முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
REWIND: ரஜினி, கமல் பட நடிகையின் துயர மரணம்

ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்தவர் நிசா நூர். பாலசந்தர், விசு உள்ளிட்டோரின் இயக்கத்திலும் அவர் நடித்துள்ளார். இதில் ஸ்ரீ ராகவேந்திரா, டிக் டிக் டிக், இளமை கோலம், எனக்காக காத்திரு, கல்யாண அகதிகள் படங்கள் முக்கியமானவை ஆகும். பிரபல நடிகர்களுடன் நடித்தும் உச்சம் செல்லாத நிசா, வறுமை நிலை சென்றார். விபசாரத்திலும் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எய்ட்ஸ் வந்து உயிரிழந்தார்.
News July 10, 2025
மகளிர் உரிமை திட்ட விதிகள் தளர்வு.. உதயநிதி தகவல்

மகளிர் உரிமைத் திட்ட விதிகளை CM ஸ்டாலின் தளர்த்தியிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம், கடந்த 22 மாதங்களாக
1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், இந்த திட்டத்தில் இன்னும் புதிதாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் உதயநிதி கூறினார்.