News March 16, 2024
சேலம் அருகே சாலை மறியல்

சேலம் மாவட்டம் இடங்கண சாலை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று இளம்பிள்ளை – சின்னப்பம்பட்டி பகுதியான பாப்பாபட்டி பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
Similar News
News November 21, 2025
பார்சல்களுக்காக முதல் முறையாக தனி ரயில்

தெற்கு ரயில்வே சார்பில் பார்சல்களை மட்டும் அனுப்புவதற்கு தனியாக 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் வரும் டிச.12-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. மங்களூரு-சென்னை ராயபுரம் வரை இயக்கப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த பெட்டிகளில் தலா 23 டன் பார்சல் ஏற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வரும் நவ.22- ஆம் தேதி முதல் நவ.24- ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஓசூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுமார் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 21, 2025
சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வரும் நவ.22- ஆம் தேதி முதல் நவ.24- ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஓசூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுமார் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


