News March 16, 2024
சேலம் அருகே சாலை மறியல்

சேலம் மாவட்டம் இடங்கண சாலை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று இளம்பிள்ளை – சின்னப்பம்பட்டி பகுதியான பாப்பாபட்டி பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
Similar News
News November 22, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.22) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 22, 2025
மல்லிவிலை கிடுகிடு உயர்வு

கார்த்திகை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. குறிப்பாக சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை ரூ.2,000-க்கும், ஜாதிமல்லி ரூ.1,200-க்கும், முல்லை ரூ.800-க்கும், நந்தியாவட்டம் ரூ.1,500-க்கும் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். தொடர்ந்து முகூர்த்த நாள் வருவதால் விலையேற்றம் இருக்கும்.
News November 22, 2025
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சேலம் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் திரும்ப பெறும் பணிக்காக இன்றும் நாளையும் (நவ.22, 23) அனைத்து வாக்கு சாவடிகளிலும் முகாம்கள் நடைபெறுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)


