News March 16, 2024
சேலம் அருகே சாலை மறியல்

சேலம் மாவட்டம் இடங்கண சாலை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று இளம்பிள்ளை – சின்னப்பம்பட்டி பகுதியான பாப்பாபட்டி பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
Similar News
News December 10, 2025
சேலம்: டிசம்பர் 11 கடைசி நாள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சிறப்பு திருத்த முறை 2026 வாக்காளர் பட்டியலில், வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர்-11ம் தேதிக்குள் வழங்க வேண்டும், என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சேலத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, திரும்ப வழங்காதவர்கள் உடனடியாக வழங்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News December 10, 2025
சேலம்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.10) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தகவல் தெரிவித்தார்.


