News November 25, 2025
Ro-Ko இல்லாததால் தள்ளாடுகிறதா இந்தியா?

தற்போது கவுகாத்தி டெஸ்டில் இந்திய அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்திய அணியின் இந்த நிலைக்கு, கோச் கம்பீரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதில் மற்றுமொரு பரிமாணமும் உள்ளது. ரோஹித், கோலி ஆகியோர் இருந்திருந்தால், சொந்த மண்ணில் இந்திய அணி இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது என சில நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News April 4, 2026
சேலம்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க
News April 4, 2026
வெள்ளியை வைத்து கடன் பெறலாம்.. இதை கவனிங்க!

தங்கத்தை போன்று <<19547252>>வெள்ளியையும்<<>> அடமானம் வைத்து கடன் பெறும் திட்டம் ஏப்.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் சிறப்பம்சமாக, தொகையை பொறுத்து நகைக் கடன் மதிப்பு மாறும். ₹2.5 லட்சம் வரை கடன் பெற, வெள்ளியின் மதிப்பில் 85% வரை பணம் கிடைக்கும். ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை கடன் பெற, 80% வரையும், அதற்கு மேல் கடன் பெற விரும்பினால் 75% வரையும் என பணம் கிடைக்கும் என RBI புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
News April 4, 2026
CBSE பாடத்திட்டத்தில் இந்தி திணிப்பா? தர்மேந்திர பிரதான்

CBSE பாடத்திட்டத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக<<19561968>> CM ஸ்டாலின் <<>>குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், திணிப்பு என்பது அவரது அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு முயற்சி என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார். புதிய கல்வி கொள்கை தாய்மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ஆனால் கட்டாய இந்தி திணிப்பு என்று ஸ்டாலின் தவறாக சித்தரிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


