News April 15, 2025

2 பிரிவுகளாகச் செயல்படும் RLJP கட்சி

image

<<16101772>>RLJP<<>> கட்சி ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிறகு 2 பிரிவுகளாகச் செயல்படுகிறது. ஒரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் சகோதரர் பசுபதி குமார் பராஸ் தலைமை வகிக்கிறார். இன்னொரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமை தாங்குகிறார். இதில் பராசுக்கு மத்திய அமைச்சர் பதவியும் முன்பு அளிக்கப்பட்டது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அவர் அப்பதவியை ராஜினாமா செய்தார்.

Similar News

News December 13, 2025

2 போட்டிகளை வைத்து கில்லை எடை போட முடியாது: நெஹ்ரா

image

SA-க்கு எதிரான டி20 தொடரில் கில் சொதப்பி வருகிறார். இது குறித்து GT கோச் நெஹ்ராவிடம் கேட்டபோது, டி20 போன்ற மிக குறுகிய ஃபார்மெட்டில், 2 போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு வீரரை எடை போட கூடாது என தெரிவித்துள்ளார். கில் சரியாக ஆடவில்லை என சாம்சன், அவரும் ஆடவில்லை என ருதுராஜ் என வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.

News December 13, 2025

₹1,020 கோடி ஊழல்.. “நேரு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்”

image

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் ₹1,020 கோடி ஊழலும், அரசுப் பணி வழங்க ₹888 கோடி லஞ்சமும் வசூலிக்கப்பட்டது பற்றி DGP-க்கு, ED துல்லியமான ஆதாரங்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சாடியுள்ளார். ஊராட்சி செயலாளர் தேர்விலும், DMK அரசு தகுதியான இளைஞர்களை நீக்கி மோசடி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் கைது

image

2023-ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகம்மாடியை ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதால் முகம்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காக போராடி 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த முகம்மாடி, கடந்த 2024-ல் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

error: Content is protected !!