News March 17, 2025
தமிழகத்தை செழிப்பாக்கும் ஆறுகள்! (2/2)

நெல்லை, தூத்துக்குடி பகுதிகளை செழிப்பாக்கும் தாமிரபரணிக்கு தனி வரலாற்றுக் கதையே இருக்கு. இலக்கிய காலத்துல பொருநை என அழைக்கப்பட்ட தாமிரபரணி, பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில இருந்து தூத்துக்குடியோட சங்குமுகம் வரைக்கும் பாயுது. நீலகிரியில் இருந்து கோவை, ஈரோடு மாவட்டங்கள் வழியா பாய்ந்து வரும் ஆறு பவானி. வனப்பகுதி வழியா ஓடும் பவானியோட அழகே தனி. கடைசியாக காவிரியுடன் சங்கமித்துவிடும்.
Similar News
News March 17, 2025
ரேஷன் அரிசியில் இனி 10% மட்டுமே குருணை

ரேஷன் அரிசியில் 25% வரை குருணை கலக்க முன்பு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், அந்த அளவை 15% குறைத்து இனி 10% மட்டுமே ரேஷன் அரிசியில் குருணை கலக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ரேஷனில் விநியோகிக்கப்படும் அரிசியில் அதிக குருணை இருப்பதாகவும், தரமில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், மத்திய அரசின் இம்முடிவினால் இனி ரேஷனில் தரமான நல்ல அரிசி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
News March 17, 2025
‘பாகுபலி’ ரசிகர்களுக்கு செம ட்ரீட் வெயிட்டிங்

திரையுலகில் தற்போது எடுக்கப்படும் பிரம்மாண்ட படங்களுக்கு அளவு கோலே பாகுபலிதான். இந்திய திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற ‘பாகுபலி’ முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் பிரபாஸின் பிறந்தநாளான அக்டோபர் 23ஆம் தேதி, ‘பாகுபலி’ ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ரவுண்டுக்கு நீங்க ரெடியா?
News March 17, 2025
ரம்ஜான்: 32 லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு மோடி பரிசு

மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையன்று 32 லட்சம் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் ‘Saughat-e-Modi’ பரிசு பெட்டகம் வழங்கப்படவுள்ளது. பாஜக சார்பில் 32,000 பேர் இதற்காக நியமிக்கப்பட்டு, முஸ்லிம்களின் தேவை குறித்து மசூதிகளில் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் அன்று மோடி பரிசு பெட்டகத்தை விநியோகிக்க பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் மாவட்ட அளவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.