News July 5, 2025
ரிதன்யா மரணம் வெறும் தற்கொலை அல்ல: சீமான்

இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை இது. இந்த நூற்றாண்டிலும் வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ரிதன்யா தற்கொலை குறித்து பேசியுள்ளார் நாதகவின் சீமான். அரசியல் அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் மீது எளிதில் ஜாமினில் வெளிவரும் வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என சீமான் சாடியுள்ளார்.
Similar News
News July 5, 2025
ஜூலை 5, 1950… அன்று தொடங்கிய சகாப்தம்!

இன்றைக்கு எந்த நொடியிலும் உலகில் என்ன நடக்கிறது என்பதை 24*7 லைவ் செய்திகள் மூலம் தெரிந்துகொள்கிறோம். இதற்கெல்லாம் தொடக்கம் 1950-ல் இதே நாளில் 20 நிமிடங்கள் ஓடிய முதல் செய்தி ப்ரோக்ராமை BBC ஒளிபரப்பியதுதான். இதனை தொடர்ந்துதான் பல செய்தி நிறுவனங்கள் தினசரி செய்தி தொகுப்பை டிவியில் கொண்டு வந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான், இன்றைக்கு 24 மணி நேரமும் லைவ் செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது.
News July 5, 2025
முதல் பெண் ‘போர் விமானி’ ஆனார் ஆஸ்தா புனியா!

இந்திய கடற்படை போர் விமானத்தின் முதல் பெண் விமானியாக துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா தேர்வாகி சாதனை புரிந்துள்ளார். ‘தங்கச் சிறகுகள்’ விருதையும் அவர் பெற்றார். ஏற்கெனவே, கடல்சார் ரோந்து விமானங்கள் & ஹெலிகாப்டர்களின் விமானிகளாக பெண்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், புனிதா போர் விமானியாக பொறுப்பேற்றதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் கடற்படையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.
News July 5, 2025
பாமகவுக்கு பிரச்னைக்கு தீர்வு சொன்ன GK மணி!

ராமதாஸும், அன்புமணியும் அமர்ந்து பேசினால் மட்டுமே பாமகவில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு எட்டும் என GK மணி கூறியுள்ளார். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவது, கருத்து கூறி வருவது தொடர்ந்தால் கட்சி நலிவு பெறும் என வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், பாமகவில் நிலவும் பிரச்னைக்கு எந்த கட்சியும் காரணமல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக திமுகவே காரணம் என அன்புமணி பேசியது கவனிக்கத்தக்கது.