News December 29, 2024
வளர்ந்து வரும் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல்

2024க்கான ‘வளர்ந்து வரும் வீராங்கனை விருது’ பட்டியலில், ஷ்ரேயங்கா பாட்டீல் (IND) இடம் பிடித்துள்ளார். ஆப் ப்ரேக் வீசுவதில் வல்லவரான இவர், IPLஇல் RCB அணிக்காக விளையாடி வருகிறார். இதேபோல, பிரேயா சார்ஜென்ட்(IRE), சஸ்கியா ஹார்லி(SCOT), அன்னெரி டெர்க்சன்(SA) இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ICC சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, நடப்பாண்டில் ஷ்ரேயங்காவுக்கு கிடைக்குமா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News August 15, 2025
நாளை விடுமுறை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் ரத்து

நாளை கோகுலாஷ்டமி என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சனிக்கிழமை(ஆக.23), 38 மாவட்டங்களிலும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. SHARE IT.
News August 15, 2025
10% ஆயில் பயன்பாட்டை குறையுங்கள்: மோடி

எதிர்வரும் ஆண்டுகளில் ‘உடல் பருமன்’ நாட்டிற்கு ஒரு பெரிய சவாலாக மாறும் என PM மோடி கவலை தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் பேசிய அவர், மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் 3-ல் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். எனவே, இனி சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்தால், அது ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் என்று அறிவுறுத்தினார். உங்கள் கருத்து என்ன?
News August 15, 2025
2 பைசாவுக்கு டீ.. ஒரு குட்டி டைம் டிராவல்

‘1 பைசா கொடுத்தா பெரிய பொட்டலத்துல கடலை பருப்பு தருவாங்க’ என நமது தாத்தா சொல்லக் கேட்டிருப்போம். இன்றைய சூழலில் ஒவ்வொரு பொருளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு பெருகும் மக்கள்தொகை, ரூபாய் மதிப்பு என பல காரணிகள் உள்ளன. இந்நிலையில், சுதந்திரம் அடைந்த 1947-ல் பொருள்களின் விலையையும், இன்றைய விலையையும் மேலே உள்ள படங்களில் காணலாம். இதை நீங்கள் முதல்முதலாக எவ்வளவு விலைக்கு வாங்கினீர்கள்?