News August 8, 2024
2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை அதிகரிப்பு

இந்தியாவில் 2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வீடுகளின் விலை 94% என இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 30 நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. இவற்றின் விலை 54% முதல் 94% வரை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 26, 2025
திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsapp-ல் ‘9552300009’ என்ற எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் செய்ய வேண்டும். டிசம்பர் 30- ஜனவரி 1 தரிசன தேதிகள் ஓப்பனாகும். அதில், விருப்பப்பட்ட ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. இதை, டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
News November 26, 2025
திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsapp-ல் ‘9552300009’ என்ற எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் செய்ய வேண்டும். டிசம்பர் 30- ஜனவரி 1 தரிசன தேதிகள் ஓப்பனாகும். அதில், விருப்பப்பட்ட ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. இதை, டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
News November 26, 2025
MLA பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஜி.கே.மணி

ராமதாஸ், அன்புமணி இணைய தனது MLA பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இருவரும் இணையாமல் இருப்பதற்கு நான்தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக வேதனையுடன் கூறினார். மேலும், ராமதாஸை விட பதவி எங்களுக்கு பெரியது இல்லை; ராமதாஸ் – அன்புமணி இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி எனக் கூறிய அவர், கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


