News August 8, 2024

2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை அதிகரிப்பு

image

இந்தியாவில் 2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வீடுகளின் விலை 94% என இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 30 நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. இவற்றின் விலை 54% முதல் 94% வரை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Similar News

News November 27, 2025

உடலில் நச்சுகளை நீக்க உதவும் உணவுகள்

image

பெரும்பாலான உடல்நலப் பாதிப்புகளுக்கு காரணம், உடலில் தேங்கும் கழிவுகள் தான். ரத்தத்திலும் செல்களிலும் கழிவுகள் அதிகமாகும் போது, அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த கழிவுகளை நீக்க (detox செய்ய) சில உணவுகள் உதவும். அவற்றில் சிலவற்றை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். இந்த பயனுள்ள தகவலை பலருக்கும் SHARE செய்யுங்கள்.

News November 27, 2025

முதலிரவுக்கு மறுத்த மனைவி.. அடுத்து நடந்த விபரீதம்

image

சென்னையில் முதலிரவில் சண்டை ஏற்பட்டதால் மனைவியை சுத்தியலால் கணவன் தாக்கிய கொடுமை அரங்கேறியுள்ளது. அகஸ்டின் ஜோஷ்வா(33) என்பவர், திருத்தணியைச் சேர்ந்த பெண்ணை கரம்பிடித்துள்ளார். முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அந்த பெண் தாம்பத்யத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட சண்டையில் மனைவியை சுத்தியலால் ஜோஷ்வா தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கணவனை போலீஸ் கைது செய்துள்ளது.

News November 27, 2025

என்னை மன்னித்துவிடுங்கள்: ரிஷப் பண்ட் வருத்தம்

image

SA-வுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு வருத்தம் தெரிவித்து ரிஷப் பண்ட் X தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2 வாரமாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த அவமானமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் தரமான கிரிக்கெட்டை விளையாடி மக்களை மகிழ்ச்சிப்படுத்தவே விரும்புவோம், ஆனால் இம்முறை அதை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!