News August 8, 2024
2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை அதிகரிப்பு

இந்தியாவில் 2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வீடுகளின் விலை 94% என இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 30 நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. இவற்றின் விலை 54% முதல் 94% வரை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 26, 2025
EV விற்பனையில் மிரட்டும் மஹிந்திரா..!

கடந்த 7 மாதங்களில் மட்டும் 30,000 EV கார்களை விற்பனை செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு கார் விற்கப்பட்டுள்ளதாகவும், தங்களது 65% வாகனங்கள் இந்திய சாலைகளில் ஒவ்வொரு நாளும் பயணிப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், வரும் 2027-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 250 சார்ஜிங் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
News November 26, 2025
சினிமாவில் இருந்து விலகுகிறேன்… அறிவித்தார்!

‘சென்னை 28’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. பின்னர் ரஜினிகாந்துடன் அவர் நடித்த அனிமேஷன் படம் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு என பல படங்களில் நடித்த அவர், கடைசியாக ’மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலுக்காக சினிமாவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
News November 26, 2025
நெல் பாதிப்பு.. ஏக்கருக்கு ₹25,000 வழங்குக: EPS

மழையினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என EPS தெரிவித்துள்ளார். பருவமழைக்கு முன்பாக வாய்க்கால்களை அரசு தூர் வாராததே பயிர்கள் நீரில் மூழ்க காரணம் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், அரசின் சார்பாக நெல் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹25,000 நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என CM ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.


