News August 8, 2024

2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை அதிகரிப்பு

image

இந்தியாவில் 2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வீடுகளின் விலை 94% என இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 30 நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. இவற்றின் விலை 54% முதல் 94% வரை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Similar News

News November 28, 2025

வெள்ளி விலை ₹12,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. இன்று(நவ.28) கிராமுக்கு ₹3 அதிகரித்து ₹183-க்கும், கிலோவுக்கு ₹3,000 அதிகரித்து ₹1,83,000-க்கும் விற்பனையாகிறது. உலக சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதே, இந்தியாவில் விலை அதிகரிப்புக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 28, 2025

தவெக உடன் கூட்டணி வைக்கும் அடுத்த தலைவர் இவரா?

image

தவெகவில் இணைந்த செங்கோட்டையன், டிடிவி தினகரனிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே பாஜக அவரிடம் கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், CM வேட்பாளராக EPS இருக்கக்கூடாது என டிடிவி வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத இடத்தில் பாஜக இருக்கிறது. எனவே, டிடிவி தவெக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.

News November 28, 2025

இம்ரான் இருப்பதற்கான ஆதாரத்தை கேட்கும் மகன்

image

இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிட கோரி அவரது மகன் காசிம் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும் என்ற அவர், மனிதாபிமானமற்ற முறையில் இம்ரான் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், அவரை பார்க்க அவரது சகோதரிகளுக்கு கூட அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், அரசியல் நோக்கத்திற்காகவே அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!