News August 8, 2024
2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை அதிகரிப்பு

இந்தியாவில் 2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வீடுகளின் விலை 94% என இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 30 நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. இவற்றின் விலை 54% முதல் 94% வரை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 18, 2026
நீலகிரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) இரவு அல்லது திங்கள்கிழமை(ஜன.19) உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
News January 18, 2026
மாதவிடாய் காலத்தில் ரத்த தானம் செய்யலாமா?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்த தானம் செய்வது தொடர்பான அச்சங்கள் கட்டுக்கதைகளே என டாக்டர்கள் விளக்குகின்றனர். *இது முற்றிலும் பாதுகாப்பானது *தானம் செய்யும் ரத்தம் வேறு, மாதவிடாய் ரத்தம் வேறு. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது *ரத்த தானம் அளிக்க ஹீமோகுளோபின் 12.5g/dL-க்கு மேல் இருக்க வேண்டும் *ரத்த தானம் செய்தால் Cramps அதிகமாகாது. ஆனால், Cramps, ரத்தப்போக்கு அதிகம் இருந்தால் தானத்தை தவிர்க்கலாம்.
News January 18, 2026
BREAKING: சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல் மொத்த சந்தையில் கறிக்கோழி விலை இன்று கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை இல்லாத வகையில் 1 கிலோ ₹152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோழி 1 கிலோ ₹82-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் முட்டை 30 காசுகள் குறைந்து ₹5.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் விலை உயர்வால் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ சிக்கன் ₹240 – ₹300 வரை விற்பனையாகிறது. உங்கள் ஊரில் எவ்வளவு?


