News May 11, 2024
சென்னையில் உயரும் வீட்டு வாடகை

சென்னை உட்பட 13 முக்கிய நகரங்களில் ஆண்டுக்கு 16% வரை வீட்டு வாடகை அதிகரிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நொய்டா, பெங்களூர் போன்ற நகரங்களில் அதிகபட்சமாக 25 முதல் 35% வரை வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வாடகை வீடு தேடுபவர்கள் ₹10,000 முதல் ₹30,000 வாடகையிலேயே அதிகம் வீடு தேடுவதாகவும், அதனால் இந்த வாடகையில் உள்ள வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
Similar News
News September 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 465 ▶குறள்: வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. ▶பொருள்: முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.
News September 21, 2025
அமெரிக்கா உடன் ஒப்பந்தம் எட்டப்படுமா?

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். கடந்த 16-ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் விவசாயப் பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா விரும்பும் நிலையில், அதில் ஏற்கனவே இந்தியா தன்னிறைவை அடைந்துவிட்டதால், பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.
News September 21, 2025
இதுதான் இந்தியாவின் ஒரே எதிரி: PM மோடி

பிற நாடுகளை சார்ந்து இருப்பதுதான் இந்தியாவின் ஒரே எதிரி என PM மோடி தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை பிறநாடுகளின் கைகளில் ஒப்படைக்க முடியாது, சுயசார்பை அடைவதுதான் இதற்கான ஒரே மருந்து என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரிவிதிப்பு மற்றும் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் H1B விசாவிற்கான கட்டணத்தை 2 மடங்காக டிரம்ப் உயர்த்தியதற்கு மத்தியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.